25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


முருகனின் அறுபடை வீடு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முருகனின் அறுபடை வீடு

முதல் படை வீடு

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், முருகன் தெய்வானையுடன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.இங்கு மலைவடிவில் சிவபெருமான்அருள் புரிகிறார். அமர்ந்த கோலத்தில் முருகன் காட்சியளிப்பது சிறப்பாகும்.

இரண்டாம் படை வீடு

முருகனின் இரண்டாம் படைவீடானதிருச்செந்தூர் கடலோரத்தில் அமைந்துள்ளதால்திருச்சீரலைவாய் என்றும், ஜயந்திபுரம் என்றும் பெயருண்டு. இங்கு முருகப்பெருமான், சூரபத்மனை அழித்ததாக கந்த புராணம் கூறுகிறது.

மூன்றாம் படை வீடு

முருகனின் மூன்றாம் படை வீடான பழநி, சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியாகும். பழநி முருகர் சிலைபோகர் சித்தரால்

நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது.இங்கு, அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் சாப்பிட்டால் சகல நோய்களும் தீரும் 
நான்காவது வீடு

தன்னைவிட தன் பிள்ளைகள்அறிவுடையவர்களாக இருப்பது தந்தைக்கு மகிழ்ச்சியை தரும். அதையொட்டி, தன் பிள்ளையின் வாயால் பிரணவ மந்திரத்தின் பொருளை கேட்டு பிள்ளை குருவாக இருக்க,' தானே சீடனைப்போல் அமர்ந்து கேட்டார்.
அதனால் சிவகுருநாதன் என்ற பெயரை முருகப்பெருமான் பெற் றார்.
ஐந்தாவது வீடு

திருச்செந்தூரில் , சூரனை வதம் செய்த முருகன் திருத்தணிக்கு வந்து கோபம் தணிந்து சாந்தமாக அமர்ந்ததால் தணிகை என இவ்வூர் பெயர் பெற்றது.வேடர்குலத்தில் பிறந்த வள்ளியை, முருகன் காதல் திருமணம் புரிந்து கொண்ட இடமே திருத்தணியாகும்.
ஆறாவது வீடு
அறுபடை வீடுகளில் ஆறாவது வீடாக விளங்குவது சோலைமலை. ஒளவை பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கே ட்ட முருகன், உலக வாழ்க்கைக்கு கல்வியறிவு மட்டும் போதாது. இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்த திருவிளையாடல் புரிந்த இடம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News