25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தென்றல் நகர் அருகே குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு >> செல்வின் சிறப்பு பல் மருத்துவமனை & இம்பிளான்ட் சென்டர் >> Manickam's Badminton Indoor Stadium, Rajapalayam.(3 WOODEN COURTS) >> ராஜபாளையம் தாமிரபரணி குடிநீர் திட்ட பணிகள் முடிந்தும்,  பழைய முறையில் விநியோகத்தால் ராஜபாளையம் நகராட்சிக்கு வருவாய் இழப்பு. >> உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கை பானமான பதநீர், நுங்கு கடைகளில் குவியும் பொதுமக்கள். >> புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை பூக் குழி திருவிழா கொடியேற்றம். >> ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் >> ராஜபாளையம் ராம்கோ நிறுவனங்களின் நிறுவனர் பி.ஏ.சி ராமசாமி ராஜா பிறந்தநாள் விழா APRIL 24 கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறப்பு திட்ட முகாம் நிறைவு >> ராஜபாளையம் கோயில்வழிபாடு, திருக்கல்யாண நிகழ்ச்சி. >>


முருகனின் அறுபடை வீடு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முருகனின் அறுபடை வீடு

முதல் படை வீடு

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், முருகன் தெய்வானையுடன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.இங்கு மலைவடிவில் சிவபெருமான்அருள் புரிகிறார். அமர்ந்த கோலத்தில் முருகன் காட்சியளிப்பது சிறப்பாகும்.

இரண்டாம் படை வீடு

முருகனின் இரண்டாம் படைவீடானதிருச்செந்தூர் கடலோரத்தில் அமைந்துள்ளதால்திருச்சீரலைவாய் என்றும், ஜயந்திபுரம் என்றும் பெயருண்டு. இங்கு முருகப்பெருமான், சூரபத்மனை அழித்ததாக கந்த புராணம் கூறுகிறது.

மூன்றாம் படை வீடு

முருகனின் மூன்றாம் படை வீடான பழநி, சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியாகும். பழநி முருகர் சிலைபோகர் சித்தரால்

நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது.இங்கு, அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் சாப்பிட்டால் சகல நோய்களும் தீரும் 
நான்காவது வீடு

தன்னைவிட தன் பிள்ளைகள்அறிவுடையவர்களாக இருப்பது தந்தைக்கு மகிழ்ச்சியை தரும். அதையொட்டி, தன் பிள்ளையின் வாயால் பிரணவ மந்திரத்தின் பொருளை கேட்டு பிள்ளை குருவாக இருக்க,' தானே சீடனைப்போல் அமர்ந்து கேட்டார்.
அதனால் சிவகுருநாதன் என்ற பெயரை முருகப்பெருமான் பெற் றார்.
ஐந்தாவது வீடு

திருச்செந்தூரில் , சூரனை வதம் செய்த முருகன் திருத்தணிக்கு வந்து கோபம் தணிந்து சாந்தமாக அமர்ந்ததால் தணிகை என இவ்வூர் பெயர் பெற்றது.வேடர்குலத்தில் பிறந்த வள்ளியை, முருகன் காதல் திருமணம் புரிந்து கொண்ட இடமே திருத்தணியாகும்.
ஆறாவது வீடு
அறுபடை வீடுகளில் ஆறாவது வீடாக விளங்குவது சோலைமலை. ஒளவை பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கே ட்ட முருகன், உலக வாழ்க்கைக்கு கல்வியறிவு மட்டும் போதாது. இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்த திருவிளையாடல் புரிந்த இடம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News