ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ரித்திகா 'தங்கம்’
22 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் தாய்லாந்தில்,பெண்களுக்கான 80+ கி. கி. எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் ரித்திகா 4-1 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அசெல்டோக்டாசினை வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
இந்தியாவின் யாத்ரி படேல் பெண்களுக்கான 57 கி.கி., பிரிவு பைனலில் 2-3 என, உஸ்பெகிஸ்தானின் குமோரபோனு மாமஜோனோவாவிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார்.மற்றொரு பைனலில் (60 கி.கி.,) இந்தியாவின் பிரியா 2-3 என சீனாவின் யூ டியானிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இந்தியாவின் நீரஜ் ஆண்களுக்கான 75 கி.கி., பிரிவு பைனலில் உஸ்பெகிஸ்தானின் ஷவ்கட்ஜோன் போல்டேவிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார். மற்றொரு பைனலில் (90+ கி.கி.,) இந்தியாவின் இஷான் கடாரியா, உஸ்பெகிஸ்தானின் கலிம்ஜோன் மாமாசோலியேவிடம் வீழ்ந்தார்.
22 வயதுகுட்பட்டோர் பிரிவில் ஒரு தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் என 13 பதக்கங்கள் வென்ற இந்தியா 4வது இடம் பிடித்தது. இதன் 19 வயதுகுட்பட்டோர் பிரிவில் இந்தியாவுக்கு 3 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் என, 14 பதக்கங்கள் கிடைத்திருந்ததன.
0
Leave a Reply