கோல்டன் பிளாண்ட் பொன்னாங்கண்ணி கீரை
பச்சை பொன்னாங்கண்ணி கீரையை நன்றாக அரைத்து தலையில் தேய்த்து,20 முதல்30 நிமிடங்கள் உறை வைத்து குளிக்க, கண் எரிச்சல், உடல் சூடு நீங்கும், தலைமுடியும் கொட்டுவது நின்று, கறுத்து வளரும். பொன்னாங்கண்ணி சாறு,கரிசலாங்கண்ணி கீரை சாறு, நெல்லிக்காய் சாறு, பசும்பால் எண்ணெய், அதனுடன் சிறிது அதிமதுரம் இவற்றை சமமான அளவில் எடுத்து, பால் விட்டு அரைக்கவும், இக்கலவையை கலந்து காய்ச்சி, வடிகட்டி எடுத்த எண்ணெயை வாரம் இருமுறை தலையில் தேய்த்து தலை மூழ்கி வர கண் வியாதிகளும், பித்த நோய்களம் குணமாகும் என கூறியுள்ளனர். சித்தர்கள், பொன்னாங்கண்ணி கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து குழம்பு செய்து சாப்பிட்டு வர, எலும்புகள் நல்ல வலுப்பெறும், நோயால் குறைந்த உடல் எடை, மீண்டும் இயல்பு நிலைக்கும் வரும்.
வாரம் இரண்டு முறையாவது இக்கீரையை சாப்பிட்டு வர மூளைக்கும், இதயத்திற்கும் புத்துணர்ச்சியும், நன்றாக செயல்படவும் உதவி செய்யும். சிறுநீர் எரிச்சல் நீங்கவும், சிறுநீரகம் நன்கு செயல்படவும் பொன்னாங்கண்ணியை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். கால்சியம் இரும்பு மற்றம் தங்கச் சத்துக்கள் பொன்னாங்கண்ணியில் இருப்பதால் இது ஏழைகளின் தங்க பஸ்பம் என அழைக்கப்படுகிறது.
0
Leave a Reply