25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


 இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா- பிரதமர் மோடி சந்திப்பு  .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

 இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா- பிரதமர் மோடி சந்திப்பு  .

. ஈட்டி எறிதல் இந்தியாவின் வீரர் நீரஜ் சோப்ரா, 27.கடந்த 2021ல் டோக்கியோஒலிம்பிக்கில் தங்கம், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார். 

இந்த ஆண்டு தோஹா டைமண்ட் லீக் தொடரில், தனது கனவு இலக்கான 90.23 மீ., துாரம் ஈட்டி எறிந்துசாதித்தார். இவருக்கு ராணுவத்தில் 'லெப்டினன்ட் கவுரவ கர்னல்' அந்தஸ்து வழங்கி கவுர விக்கப்பட்டது. உலகதடகளசாம்பியன் ஷிப்பிலும் பதக்கங்கள் வென்றார்.

 தனது மனைவி ஹிமானி மோர் உடன், நேற்று நீரஜ் சோப்ரா பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள அவரது அதிகாரப் பூர்வ இல்லமான 'லோக் கல்யாண் மார்க்'கில் சந்தித்தார்.

இது பற்றி பிரதமர் மோடி  சமூகவலைத் தளத்தில் வெளியிட்ட  செய்தியில், “நீரஜ் சோப்ரா, அவரது மனைவியை சந்தித்தேன். விளையாட்டு உட்பட பல்வேறு விஷயங்கள் பற்றி சிறப்பாக கலந்துரையாடினோம்,' என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் விளையாட்டுத் துறை மீதான அவரது தொலைநோக்குப் பார்வையும் ஆதரவும்இந்தியர்களுக்கு எப்போதும் ஊக்கம் அளிக்கும்,' என குறிப்பிட்டுள்ளார். நீரஜ் சோப்ரா வெளியிட்ட செய்தியில், 'எங்களை சந்தித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News