ஜூன் 5: உலக சுற்றுச்சூழல் தினம் – பூமியைக் காக்க உறுதி ஏற்போம்!
: பூமியையும் இயற்கையையும் பாதுகாக்க வேண்டும் என்ற உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த, ஐக்கிய நாடுகள் சபையால் 1973 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.
: காடுகள் அழிப்பு, பிளாஸ்டிக் பயன்பாடு ஆகியவற்றால் பூமி வெப்பமயமாகி வருகிறது. இதைத் தடுக்க, ஒவ்வொருவரும் தங்கள் பிறந்தநாளில் ஒரு மரக்கன்றையாவது நட்டு வளர்க்க வேண்டும்.
நாம் செய்ய வேண்டிய எளிய மாற்றங்கள்:
பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து, துணிப்பைகளைப் பயன்படுத்துவது.
தேவையில்லாத போது மின்விசிறி, விளக்குகளை அணைத்து மின்சாரத்தைச் சேமிப்பது.
குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் மட்டுமே போடுவது மற்றும் தண்ணீரை வீணாக்காமல் சேமிப்பது.
"மரம் வளர்ப்போம், மழை பெறுவோம், பூமியைக் காப்போம்!" என்ற உறுதியோடு, வருங்காலத் தூண்களான குழந்தைகள் நினைத்தால் பசுமையான உலகை உருவாக்க முடியும்.
0
Leave a Reply