மாடி தோட்டத்தில் பிரண்டை வளர்க்க.....
பிரண்டை என்பது மூலிகை தாவரமாகும். இது எல்லா சீசனிலும் தழைத்து வளர கூடிய ஒரு வகை புதர் செடியாகும். எனவே நீங்கள் எந்த சீசனியிலும் பிரண்டையை பயிரிடலாம். இது கிராம புறங்களில் அதிகமாக பரந்து வளரக்கூடியது. இது நம் உடலில் ஏற்பட கூடிய பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.பிரண்டைவளர்க்க தேவைப்படும்GrowBags அல்லது மண் தொட்டி,மண்,மண்புழு உரம் அல்லது மாட்டு சானம்.
முதலில் பிரண்டைசெடிநடுவதற்குஉங்கள்வீட்டுபகுதிகளில்உள்ளகாய்கறிகடையில் முற்றிய பிரண்டையை வாங்கி வைத்து கொள்ளுங்கள்.பிறகு உங்கள் வீட்டு பகுதியில் கிடைக்கக்கூடிய மண்ணை எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் மண்புழு உரம் அல்லது மாட்டு சாணம் சேர்த்துகலந்துகொள்ளுங்கள்.
இப்போது 5கணுக்கள் அளவிற்கு உள்ள முற்றிய பிரண்டையை எடுத்து கொள்ளுங்கள். பிரண்டையின்அடிப்பகுதியில்உள்ள கணுவின் கீழ் பகுதியை சிறிதளவு வெட்டி விடுங்கள்.
பிறகு ஒரு மண் தொட்டி அல்லது Grow Bags எடுத்து, அதில்கலந்துவைத்துள்ளமண்உரத்தைநிரப்பிகொள்ளுங்கள். சமமானஅளவிற்குநிரப்பியதும்முற்றிய பிரண்டையை2கணுக்கள் மண்ணிற்குள் புதையும் படி குழிபறித்து பதித்து கொள்ளுங்கள்.இப்போது அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாடியின் சிறிது நிழலான பகுதியில் வைத்து கொள்ளுங்கள். பிரண்டைசெடி துளிர் விடும் வரை தண்ணீர் விட வேண்டும்.
பிரண்டையை பதித்த 20 அல்லது25 நாட்களிலே நன்றாகதுளிர்விட்டுவளரஆரம்பித்துவிடும்.பிரண்டை செடிக்கு மாதம் ஒரு முறை நன்கு மக்கிய சாணம் உரம் மற்றும் மண்புழு உரம் போட வேண்டும். நம் உடலுக்கு தேவையான அதிகப்படியான சத்துக்களை தரக்கூடிய மூலிகை செடியான பிரண்டை செடி.
0
Leave a Reply