முன்னாள் நிதி அமைச்சரும், பிரதமருமான மன்மோகன் சிங் காலமானார்.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம், சக்வால் மாவட்டத்தில் பிறந்த மன்மோகன் சிங், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் பஞ்சாபின் அமிர்தசரசுக்கு குடி பெயர்ந்தார். பஞ்சாப் பல்கலையிலும், பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலையிலும், பொருளாதார படிப்பை முடித்தார். அதன் பின், பொருளாதார பேராசிரியராக பணியை துவங்கினார்.
மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர், நிதிச் செயலர், ரிசர்வ் வங்கி கவர்னர், திட்டக் குழு துணை தலைவர் போன்ற முக்கிய பதவிகளை பல்வேறு காலக் கட்டங்களில் வகித்துள்ளார். 1990ல் முன்னாள் பிரதமர் சந்திரசேகரின், பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
கடந்த, 1991ல் பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசில், நிதி அமைச்சராக பதவி வகித்தார்.அப்போது இவர் கொண்டு வந்த தாராள மயமாக்கல் கொள்கை, நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தியது.
மயக்கமடைந்த 'மன்மோகன் சிங்கை உறவினர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில், 26 december இரவு 8:06 மணிக்கு அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி, இரவு 9:51 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக, எய்ம்ஸ் மருத்துவ மனை, அதிகாரபூர்வமாக அறிவித்தது. நாட்டின் பிரதமராக இரண்டு முறை இருந்தவர் மன்மோகன் சிங். ஜவஹர்லால் நேருவுக்கு பின், முழு ஆட்சி காலத்தை நிறைவு செய்த பின் மீண்டும் பிரதமரானவர் என்ற பெருமைக்கு உரியவர்.
0
Leave a Reply