25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


இந்தியா, இலங்கை யில் 10வது டி-20 உலக கோப்பை லீக்  கிரிக்கெட் போட்டி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா, இலங்கை யில் 10வது டி-20 உலக கோப்பை லீக்  கிரிக்கெட் போட்டி .

கொழும்பு, பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் ‘நடப்புசாம்பியன்' இந்தியா, பாகிஸ்தான் அணிகள்  மோதின. 

'டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா, 'பவுலிங்' தேர்வு செய்தார். 

இந்திய அணி 20 ஓவரில் 175/7 ரன் எடுத்தது. 

பாகிஸ்தான் அணி, 18 ஓவரில் 114  ரன்னுக்கு தோல்வி அடைந்தது. 

ஆட்டநாயகன் விருதை இஷான் கிஷான் வென்றார். 

'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'சி' பிரிவு லீக் போட்டியில் மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று வெஸ்ட் இண்டீஸ், நேபாளம் அணிகள் மோதின.

 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது 

நேபாள அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்தது, 

வெஸ்ட் இண்டீஸ் அணி 15.2 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 134 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் விருதை வெஸ்ட் இண்டீசின் ஹோல்டர் வென்றார். 

ஏற்கனவே ஸ்காட்லாந்து, இங்கிலாந்தை வென்ற வெஸ்ட் இண்டீஸ்,வெற்றியுடன் 'சூப்பர்-8' சுற்றுக்குள் நுழைந்தது.

3ல் வரிசையாக தோற்ற நேபாள அணி, அடுத்தசுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.

'டி-20' உலக கோப்பை தொட ருக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில்  சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று அமெரிக்கா, நமீபியா அணிகள் மோதின.

'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த அமெரிக்க அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 199 ரன் எடுத்தது.  

நமீபிய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 168 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. 

ஆட்ட நாயகன் விருதை அமெரிக்காவின் சஞ்சய் வென்றார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News