25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >> தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில் >> ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். >> இராஜபாளையம் ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம், போலீசாருக்கு பொது மருத்துவ முகாம். >> இயற்கை சம நிலையை பாதுகாக்கராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரம் கிராம மக்கள் பசுமை புரட்சி ,தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள்ஏற்படுத்தி பாதுகாக்கின்றனர். >> உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்30-வது போட்டி இந்தியாவின் டெல்லியில் நடக்க உள்ளது. >> அழகான ஓவிய வகுப்பு >> கல்லூரி மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ராஜபாளையத்தில் சீனாவின் அமுர் வல்லுாறு பறவை . பறவை ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். >>


ராஜுக்கள் கல்லூரியில் 76 ஆவது குடியரசு தின விழா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜுக்கள் கல்லூரியில் 76 ஆவது குடியரசு தின விழா.

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் 76 வது குடியரசு தின விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விஷ்ணு சங்கர் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி (பொறுப்பு) முதல்வர் ராமகிருஷ்ணன் தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக ராஜபாளையம் அரிமா சங்கத் தலைவர் சூரியநாராயணன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி, தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று சிறப்புரை ஆற்றினார். அவர் தனது சிறப்புரையில் இன்னுயிரைத் துறந்து உயிர் நீத்த விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு மரியாதை செய்து குடியரசு நாளை போற்றுகின்றோம். மாணவர் சமுதாயம் மது, போதை ஆகியவற்றிற்கு அடிமையாகாமல் வாழ்க்கையில் முன்னேற்றம் பெற வேண்டும். தங்களது உடல் நலனை மனதில் கொண்டு சாலை போக்குவரத்து போன்ற முக்கிய இடங்களில் கவனமாகச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். குடியரசு தின விழாவை முன்னிட்டு உடல் தகுதியை பேணிக் காக்க விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். ஆண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களை மாணவர்கள் சுஜித் கண்ணன், நவீன் மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

பெண்கள் பிரிவில் முதல் மூன்று இடத்தை மாணவிகள் பாப்பாத்தி, ராக்கம்மாள் மற்றும் மற்றும் சக்தி ஆகியோர் பரிசுகளை வென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும், பரிசுக்கோப்பையும்,   பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மாராத்தான் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் முத்துக்குமார் மற்றும் அபிநயா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். நிறைவாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திருமதி சத்யா நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில் ராஜபாளையம் அரிமா சங்க நிர்வாகிகள், பேராசிரியர்கள், தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News