9.50 கோடி பரிசு தொகை உள்ள, சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம் .
இன்று முதல் 31-ந் தேதி வரை சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடக்க உள்ளது.
தரவரிசையில் 22-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா, முன்னாள் ஜூனியர் உலக சாம்பியனான டாமோகா மியா ஜஜியுடனும் (ஜப்பான்), மாள்விகா பான்சோத், லின் ஹிசாங் டியுடனும் (சீன தைபே) மோதுகின்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 5-ம் நிலை வீராங்கனையான புத்ரி குசுமாவர்தானியுடன் (இந்தோனேசியா) தனது சவாலை தொடங்குகிறார்
ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி, ஹரிகரன் அம்சகருணன்- எம்.ஆர். அர்ஜூன், பெண்கள் இரட்டையர் பிரிவில் கவிபிரியா-சிம்ரன் சிங், ருதபர்ணா- ஸ்வேதா பர்ணா உள்ளிட்ட இந்திய ஜோடிகள் களம் காணுகின்றன.
0
Leave a Reply