9-வதுஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி
9வதுஐ.சி.சி.சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.கராச்சியில் பகல்,இரவு மோதலாக நேற்று தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்தின. 'டாஸ்' ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.50 ஓவர்முடிவில் நியூசிலாந்து அணி5 விக்கெட்டுக்கு 320 ரன்கள் குவித்தது, பாகிஸ்தான் அணி47.2 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.இதன் மூலம் நியூசிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வெற்றியோடு தொடங்கியது. துபாயில் இன்று நடக்கும் ஆட்டத்தில் இந்தியா,வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
0
Leave a Reply