பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு, நடைபெறும் தமிழ் வார விழாவில் இளைஞர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும் என அறிவித்தார்.அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன்படி, 10.05.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இளைஞர்களுக்கான
தமிழ் மொழி இலக்கிய மாநில அளவிலான வினாடி வினாப் போட்டி நடைபெறவுள்ளது.
இந்த மாநில அளவிலான வினாடி வினாப் போட்டியில் குழுவாக அதிகபட்சம் மூன்று நபர்கள் பங்கு பெறலாம். பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15,000- இரண்டாம் பரிசாக ரூ.10,000- மூன்றாம் பரிசாக ரூ.7000- வழங்கப்படும்.
இப்போட்டிகளில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் 96988-10699 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply