25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சட்டமன்றத் தேர்தல்-2026-னை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு(Mock Poll) பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சட்டமன்றத் தேர்தல்-2026-னை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு(Mock Poll) பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வைப்பு அறையில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்-2026-னை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு(Mock Poll) பணிகளை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்  (07.01.2026)  தொடங்கி வைத்தார்.எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது பயன்படுத்துவதற்காக வாக்குப் பதிவு இயந்திரங்களை முதற்கட்டமாக சரிபார்க்கும் பணியானது விருதுநகர் மாவட்டத்தில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பொறியாளர்களால் கடந்த 11.12.2025 முதல் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சரிபார்க்கும் பணியானது நேற்றுடன்(06.01.2026) முடிவடைந்தது. இதனையடுத்து, சரிபார்க்கப்பட்ட இயந்திரங்களில் 1 சதவீத இயந்திரங்களில் தலா 1200 வாக்குகளும், 2 சதவீத இயந்திரங்களில் தலா 1000 வாக்குகளும், 2 சதவீத இயந்திரங்களில் தலா 500 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டு கட்டுப்பாட்டு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் விவிபேட் இயந்திரத்தில் அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டுக்களின் எண்ணிக்கை ஒப்பிட்டு சரிபார்க்கப்படும்.எந்தெந்த இயந்திரங்களில் இந்த மாதிரி வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளே இயந்திரங்களைத் தேர்வு செய்தனர். இந்த மாதிரி வாக்குப்பதிவு இன்று(07.01.2025) காலை 9.30 மணிக்குத் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இது நாளை(08.01.2026) வரை நடைபெறும்.

மாதிரி வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் எதிர்வரும் தேர்தலில் பயன்படுத்துவதற்கென பாதுகாப்பறையில் வைத்து சீலிடப்படும். இவ்வாறு சரிபார்த்து பாதுகாப்பில் வைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்படும். சரிபார்க்கும் பணியின் போது பழுதடைந்துள்ளதாகக் கண்டறியப்பட்ட இயந்திரங்கள் அனைத்தும் ஒரு வார காலத்திற்குள் பெங்க;ருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.சட்டமன்றத் தேர்தல்-2026-னை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு(Mock Poll) பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தொடங்கி வைத்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News