25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 னை முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 னை முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, இராஜபாளையம், விருதுநகர் மற்றும் திருவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில்,  (25.032026) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்-2026 முன்னிட்டு, மாவட்டத்தில் தேர்தல் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து நடத்தி  வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் சிவகாசி, வெம்பக்கோட்டை மற்றும் திருவில்லிபுத்தூர் பகுதிகளில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகள், இராஜபாளையத்தில் உள்ள  பஞ்சு ஆலைகள், விருதுநகரில் உள்ள பேப்பர் கேப்ஸ் தயாரிப்பு ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளில் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழியினை பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News