தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 னை முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி, இராஜபாளையம், விருதுநகர் மற்றும் திருவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில், (25.032026) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்-2026 முன்னிட்டு, மாவட்டத்தில் தேர்தல் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து நடத்தி வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் சிவகாசி, வெம்பக்கோட்டை மற்றும் திருவில்லிபுத்தூர் பகுதிகளில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகள், இராஜபாளையத்தில் உள்ள பஞ்சு ஆலைகள், விருதுநகரில் உள்ள பேப்பர் கேப்ஸ் தயாரிப்பு ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளில் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழியினை பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.
0
Leave a Reply