(ஏ.ஐ.எப்.எப்.,) இந்திய கால்பந்து விருது வழங்கும் விழா.
(ஏ.ஐ.எப்.எப்.,) சார்பில்அனைத்துஇந்தியகால்பந்துகூட்டமைப்பு,ஒவ்வொருஆண்டும்சிறப்பாகசெயல்படும்வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படும்.நேற்று,ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் சிறந்த வீரருக்கான விருதை சுபாஷிஷ் போஸ் கைப்பற்றினார். கோல்கட் டாவை சேர்ந்த தற்காப்பு வீரரான இவர், இந்தியாவுக்காக 42 போட்டியில் பங்கேற்றுள்ளார். இவரது தலைமையிலான மோகன் பகான் அணி, இந்தியன் சூப் பர் லீக் (ஐ. எஸ்.எல்.,) 11வது சீசனில் (2024-25) கோப்பை வென்றது. தவிர, லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து ஐ.எஸ்.எல்., ஷீல்டு வென்றது.
தெலுங்கானாவை சேர்ந்த மத்தியகள வீராங்கனையான ஈஸ்ட் பெங்கால் அணியின் சவுமியா சிறந்த வீராங்கனைக்கான விருதை தட்டிச் சென்றார். தெலுங்கானாவை சேர்ந்த மத்தியகள வீராங்கனையான இவர், இந்தியாவுக்காக 33 போட்டியில் களமிறங்கினார். சிறந்த கோல்கீப்பருக்கான விருதை ஹிமாச்சல பிரதேசத்தின் விஷால் கைத் கைப்பற்றினார். இவர், ஐ.எஸ்.எல்., 11வது சீசனில் சிறந்த கோல்கீப்பராக தேர்வாகினார். பெண்கள் பிரிவில் சிறந்த கோல்கீப்பராக மணிப்பூரின் பந்தோய் சானு கைப்பற்றினார்.சிறந்த நம்பிக்கைக்குரிய வீரராக கோவாவின் பிரிசான் பெர்ணான்டஸ், வீராங்கனையாக மணிப்பூரின் தோய்பி சானா சானு தேர்வாகினர்.
0
Leave a Reply