வேலைவாய்ப்புத் துறை சார்ந்த அனைத்துச் சேவைகளையும் இணையதளம் வாயிலாக இலவசமாகப் பெறலாம்: இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தல்.
விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்புப் பதிவு, பதிவு புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை கோருதல், கூடுதல் தகுதிப் பதிவு மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணையதளம் வாயிலாக, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் எந்தவிதக் கட்டணமுமின்றி வழங்கப்பட்டு வருகின்றன.
மேற்கண்ட அனைத்துச் சேவைகளையும் மனுதாரர்கள் தங்களின் இருப்பிடத்திலிருந்தே www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி, எளிய முறையில் இலவசமாகச் செய்துகொள்ளத் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எனவே, பொதுமக்கள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவாளர்கள் எவரும் போலி விளம்பரங்களையோ அல்லது இடைத்தரகர்களையோ நம்பித் தங்களின் தனிப்பட்ட விவரங்களையோ அல்லது பணத்தையோ கொடுத்து ஏமாற வேண்டாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply