25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


வேலைவாய்ப்புத் துறை சார்ந்த அனைத்துச் சேவைகளையும் இணையதளம் வாயிலாக இலவசமாகப் பெறலாம்: இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வேலைவாய்ப்புத் துறை சார்ந்த அனைத்துச் சேவைகளையும் இணையதளம் வாயிலாக இலவசமாகப் பெறலாம்: இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தல்.

விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்புப் பதிவு, பதிவு புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை கோருதல், கூடுதல் தகுதிப் பதிவு மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணையதளம் வாயிலாக, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் எந்தவிதக் கட்டணமுமின்றி வழங்கப்பட்டு வருகின்றன.

மேற்கண்ட அனைத்துச் சேவைகளையும் மனுதாரர்கள் தங்களின் இருப்பிடத்திலிருந்தே www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி, எளிய முறையில் இலவசமாகச் செய்துகொள்ளத் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, பொதுமக்கள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவாளர்கள் எவரும் போலி விளம்பரங்களையோ அல்லது இடைத்தரகர்களையோ நம்பித் தங்களின் தனிப்பட்ட விவரங்களையோ அல்லது பணத்தையோ கொடுத்து ஏமாற வேண்டாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News