25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


திரீசா, காயத்ரி உள்ளிட்ட 17 பேருக்கு அர்ஜுனா விருது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திரீசா, காயத்ரி உள்ளிட்ட 17 பேருக்கு அர்ஜுனா விருது.

சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு சார்பில் அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது. 2025-ம் ஆண்டுக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியல் மறுபரிசீலனை செய்யப்பட்ட நிலையில், 17 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அர்ஜுனா விருதுக்கு தேர்வானவர்களில் தடகள வீரர்கள் தேஜஸ்வின் ஷங்கர், பிரியங்கா, முகமது அஜ்மல், திவ்யா, விதித் சந்தோஷ் சேத்ரி, பாட்மின்டன் வீராங்கனைகள் திரீசா, காயத்ரி, குத்துச்சண்டை வீரர் நரேந்தர், ஹாக்கி வீரர்கள் ராஜ்குமார் பால், லால்ரெம்சியாமி, கபடி வீரர்கள் சுர்ஜீத், பூஜா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் படகு வலித்தல் வீரர் அர்விந்த் சிங், துப்பாக்கிச் சுடுதல் வீரர் அகில் ஷியோரன், பாரா தடகள வீராங்கனை ஏக்தா பயான், காது கேளாதோர் துப்பாக்கிச் சுடுதல் வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த், பாரா துப்பாக்கிச் சுடுதல் வீரர் ருத்ராங்க்ஷ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வாழ்நாள் சாதனைக்கான அர்ஜுனா விருது முன்னாள் கால்பந்து வீரர் அருமைநாயகத்திற்கு வழங்கப்பட உள்ளது.

துரோணாச்சார்யா விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. குத்துச்சண்டை பயிற்சியாளர் தர்மேந்திர யாதவ், மல்யுத்த பயிற்சியாளர் விரேந்தர் குமார் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. சிறந்த பயிற்சியாளர்களுக்கான விருதுக்கு பர்வீர் சிங், சோட்டே லால் யாதவ் மற்றும் நேஹா சவான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News