அருள்மிகு சுந்தரமகாலிங்கம் திருக்கோவிலுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களை தினந்தோறும் அனுமதிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தரமகாலிங்கம் திருக்கோவிலுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களை தினந்தோறும் அனுமதிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
அதன்படி அருள்மிகு சுந்தரமகாலிங்கம் திருக்கோவிலுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தினந்தோறும் காலை 06.00 மணி முதல் 10.00 மணி வரை மட்டுமே சோதனைச் சாவடி வழியாக அனுமதிக்கப்படுவர். கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மாலை 04.00 மணிக்குள் திரும்பிவர வேண்டும். உரிய அனுமதியின்றி எவரேனும் மலையில் தங்கியிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மலைக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட பாதை வழியாக மட்டுமே பக்தர்கள் செல்ல வேண்டும். அனுமதிக்கப்பட்ட பாதையை விட்டு விலகி வேறு எந்தப்பகுதியிலும் நுழையக் கூடாது. மலையேற்றப் பாதைகளிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குப்பைகள் கொட்டப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. பாலித்தீன், பிளாஸ்டிக், தீப்பெட்டிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை மலைப்பகுதிக்கு எடுத்துச் செல்லக்கூடாது. மலைக்குச் செல்லும் பக்தர்கள் அனைவரும், வனத்துறை சோதனைச் சாவடியில் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.தடைசெய்யப்பட்ட பொருட்களை யாரும் கொண்டு செல்லக்கூடாது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நாள்தோறும் சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ)/ மாவட்ட வருவாய் அலுவலர் திரு. இரா.ராஜேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply