25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


அவல் கட்லெட்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அவல் கட்லெட்

தேவையான பொருட்கள்-

அவல் 1 கப்,உருளை கிழங்கு 2,சீஸ் 1 கட்டி துருவியது,

கேரட் 1/4 கப்,பச்சை மிளகாய் 1/2 (பாதி),எலுமிச்சை ஜூஸ் 1/2 பாதி பழம்,

 3 பிரட் தூள்,இஞ்சி 1 துண்டு,மைதா 2டீஸ்பூன், தண்ணீர்,உப்பு ,

மிளகு தூள் 1/4 டீஸ்பூன் ,கரம் மசாலா 1/4 டீஸ்பூன்,சாட் மசாலா தூள் 1/2 டீஸ்பூன்,மிளகாய் தூள் 1/4 டீஸ்பூன்,

ஆயில் 1 குழிகரண்டி,கொத்தமல்லி தழை

செய்முறை -

பிரட் துண்டுகள்3 மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.அவல் சுத்தம் செய்து கழுவி2,0 நிமிடம் தண்ணீரில் ஊற விடவும்.உருளை கிழங்கு வேக விட்டு மசித்து வைக்கவும்.சீஸ் துருவி வைக்கவும்.கேரட் துருவி வைக்கவும்.கழுவி ஊற விட்ட அவலை பிழிந்து வைக்கவும்.இஞ்சி பொடியாக நறுக்கி வைக்கவும்.பச்சை மிளகாய்1 பொடியாக நறுக்கி வைக்கவும்.கொத்தமல்லி தழை சிறிது பொடியாக நறுக்கி வைக்கவும்.எலுமிச்சம் பழம் பாதி எடுத்து வைக்கவும்.

கரம் மசாலா1/4 டீஸ்பூன்,மிளகு தூள்1/4 டீஸ்பூன்,சாட் மசாலா1/2 டீஸ்பூன்,உப்பு,மிளகாய் தூள்1/4 டீஸ்பூன் எடுத்து வைக்கவும்.உருளை கிழங்கு மசித்தது சீஸ் ,அவல் ,கேரட் ,பச்சை மிளகாய் ,இஞ்சி ,கொத்தமல்லி நறுக்கியது அனைத்து மசாலா தூள் உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும்.எலுமிச்சை ஜூஸ் கடைசியாக சேர்க்கவும். நன்கு பிசைந்து வைக்கவும்.சிறிய உருண்டை செய்து நடுவில் தட்டை ஆக்கவும்.

மைதா மாவு2 டீஸ்பூன் சலித்து தண்ணீர் சிறிது ஊற்றி கட்டி பிடிக்காமல் கலக்கி வைக்கவும்.பிரட் தூள் ஒரு கிண்ணத்தில் வைக்கவும்.தட்டையாக உருட்டிய மாவு எடுத்து மைதா கரைசலில் நனைத்து பிரட் தூளில் பிரட்டி தோசை கல்லில் அடுப்பை சிம்மில் வைத்து இரு புறமும் பொன்னிறமாகும் வரை ஆயில் சேர்த்து சுட்டு எடுக்கவும். கிறிஸ்பியான கட்லெட் ரெடி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News