சேலஞ்சர் ஸ்குவாஷ்: அரையிறுதிக்கு முன்னேறிய செந்தில்குமார்.
மும்பையில் நடைபெற்று வரும் பி.எஸ்.ஏ. சேலஞ்சர் ஸ்குவாஷ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், எகிப்தின் அப்துல்லா ஹபீஸை 15-13, 11-4, 11-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் அவர் எகிப்தின் யாசின் ஷோடியை சந்திக்கிறார்.
பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் தன்வி கண்ணா, ஜப்பானின் ஜோ போவை 11-6, 11-7, 8-11, 11-6 என்ற செட் கணக்கில் தோற்கடித்து அரையிறுதியை எட்டினார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஷமீனா ரியாஸ், ஜப்பானின் அகாரி மிடோரிகவாவிடம் 10-12, 8-11, 11-5, 2-11 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
0
Leave a Reply