25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தேங்காய் இனிப்பு சூப்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேங்காய் இனிப்பு சூப்

உடல் ஆரோக்கியத்துடன் தேவையான குளுக்கோஸ், சோடியம் பொட்டாசியம், அயோடின் போன்ற தாது உப்புக்கள் தேங்காயில் தாராளமாக உள்ளன. இது வாயுவையும், பித்தத்தையும் போக்கி உடலுக்கு வலிமையை சேர்க்கிறது.தேங்காயுடன் காரப்பொருள்கள் சேர்த்து சூப் செய்தால் இதன் சத்துக்கள் குறைவுபடும். ஆதலால், இனிப்புச் சுவையுடன் கூடிய சூப்பாகத் தயாரித்துக் கொள்வதே நல்லது.

தேவையான பொருட்கள்- முற்றிய தேங்காய் - 2,முந்திரிப் பருப்பு 10,எலக்காய் 3,பச்சை அரிசி - 50,கிஸ்மிஸ் பழம் - 10,

தண்ணீர் - தேவையான அளவு

 

செய்முறை-நன்றாக முற்றிய தேங்காய் இரண்டை உடைத்து.துருவி150 மி.லி வெந்நீர் விட்டு சிறிது நேரம் கழித்து நன்றாகக் கசக்கிப் பிழிந்து, கெட்டியாகப் பால் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு தேங்காய்த் துருவலை அம்மியில் வைத்து அரைத்து100 மி.லி நீர்விட்டு, நன்றாகக் கசக்கிப் பிழிந்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.மீண்டும் ஒருமுறை200 மி.லி நீர்விட்டு அந்தப் பாலை அடுப்பில் வைத்து பச்சை அரிசி50 நெய்யாக உடைத்து பாலில் போட்டு கொதிக்க விட வேண்டும்.

அரிசி வெந்து பதமானதும், இரண்டாவது பாலைவிட்டுக் கொதிக்கவிட வேண்டும் பாயாசம் போல ஆனதும்10 முந்திரிப் பருப்பையும்10 கிஸ்மிஸ் பழத்தையும் வறுத்துப் போட வேண்டும்.3 ஏலக்காய்களை தோல் போக்கி, விதைகளை மட்டும் பொடி செய்து போட வேண்டும். இனிப்பு சூப்பை கீழே இறக்கி சூடு சிறிது ஆறியதும், முதல் பாலை விட்டுச் சூடு ஆறும் வரை கரண்டியால் கிளறவும் இளஞ்சூடாக இந்த இனிப்பு தேங்காய் சூப்பை பரிமாறவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News