25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >> தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில் >> ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். >> இராஜபாளையம் ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம், போலீசாருக்கு பொது மருத்துவ முகாம். >> இயற்கை சம நிலையை பாதுகாக்கராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரம் கிராம மக்கள் பசுமை புரட்சி ,தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள்ஏற்படுத்தி பாதுகாக்கின்றனர். >> உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்30-வது போட்டி இந்தியாவின் டெல்லியில் நடக்க உள்ளது. >> அழகான ஓவிய வகுப்பு >> கல்லூரி மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ராஜபாளையத்தில் சீனாவின் அமுர் வல்லுாறு பறவை . பறவை ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். >>


வளைவு விரல் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வளைவு விரல் .

வலது கையில் உள்ள மோதிர விரல் அடிக்கடி மடங்கிப் போய்விடுகிறது. அதை இடது கையை வைத்து நிமிர்த்தினால் பழைய நிலைக்கே வந்துவிடுகிறது. விரல் மடங்கும்பொழுது சற்று வலிக்கிறது. மற்றபடி செய்யும் வேலைகளில் எந்தத் தொந்தரவும் இல்லை. இது எதனால் வருகிறது. இதற்கு  சிகிச்சை முறை.

உங்களுக்கு ஏற்படும் தொல்லை 'வளைவு விரல் தொல்லை என்று சொல்லப்படும். இது எதனால் வருகிறது என்ற காரணம் சரியாகத் தெரியவில்லை. நீரிழிவு மற்றும் முடக்குவாதம் உள்ளவர்களுக்கு இந்தத் தொல்லை வர வாய்ப்பு அதிகம், விரல்களை அதிகமாக மற்றும் அழுத்தமாக உபயோகப்படுத்துபவர்களுக்கு இத்தொல்லை வரலாம். முதுமையில் இத்தொல்லை வர வாய்ப்பு அதிகம்.

அறிகுறிகள்

விரல்கள் சாதாரண நிலையில் இருக்கும் போது வலி ஏதுமிருக்காது. விரல்களை மடக்கி, நீட்டும் போது ஒருசில சத்தத்துடன் வலி ஏற்படும். தொடர் ஓய்வுக்குப் பிறகு விரலை நீட்டிமடக்கும்போது வலி ஏற்படலாம். உதாரணம்: இரவுக்குப் பின் காலையில் இந்த வலி வரலாம். இந்தத் தொல்லை வலது கைவிரல்களில் வந்தால், உணவு உண்ணச் சிரமமாக இருக்கும். முடிந்தால் ஸ்பூன் அல்லது இடது கையில் சாப்பிடலாம்.

சிகிச்சை முறை

வலி அதிகமாக இருப்பின் விரலுக்குச் சற்று ஓய்வு கொடுக்கலாம்.

இயன்முறைச் சிகிச்சை மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

தேவைப்படும்போது வலி நிவாரணியை எடுத்துக்கொள்ளலாம்.

மேற்கண்ட வழிமுறைகளில் பலன் கிடைக்காவிட்டால், விரலின் அடிப்பாகத்தில் ஸ்டீராய்டு ஊசியைப் போட்டுக்கொள்ளலாம். இந்த ஊசியைத் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் போட்டுக்கொள்ளக் கூடாது.ஊசி போட்டும் வலி குறையவில்லை என்றால் அறுவைசிகிச்சைமூலம்நல்லபலன் கிடைக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News