25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


மகளிர் மற்றும் குழந்தைகள் விடுதிகள் ஜூன் 30-க்குள் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர்  உத்தரவு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மகளிர் மற்றும் குழந்தைகள் விடுதிகள் ஜூன் 30-க்குள் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்துத் தொழிற்சாலை விடுதிகள், தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் ஆகியவை, ‘தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் (ஒழுங்குமுறை) சட்டம் 2014’ மற்றும் அதன் 2015-ஆம் ஆண்டு விதிகளின்படி, வரும் *30.06.2026-க்குள்* தங்களது விடுதிகளைக் கட்டாயமாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே பதிவு செய்து, புதுப்பிக்காமல் உள்ள விடுதிகள் உடனடியாகத் தங்களது உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. அரசின் விதிமுறைகளின்படி, உரிய உரிமம் பெறாமல் விடுதிகளை நடத்தினால் *2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50,000/- அபராதம்* விதிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

விடுதிகள் பதிவு செய்வது தொடர்பான முழு விவரங்களையும், இதனுடன் இணைக்கப்பட்டுள்ள *QR Code* மூலம் காணொளி வாயிலாக அறிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவு செய்யாத அல்லது புதுப்பிக்காத விடுதிகள் மற்றும் நிறுவனங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் கருத்துருக்களைக் கீழே குறிப்பிட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  அவர்கள் தெரிவித்துள்ளார்.

முகவரி

மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், விருதுநகர் மாவட்டம் – 626002.

தொலைபேசி எண்: 04562-252701

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News