மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் வெற்றிபெற்றவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக இலவச மாதிரி நேர்காணல்.
விருதுநகர் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தினால் உதவியாளர் பதவிகளுக்கான நேரடித் தேர்வு அறிவிக்கை 06.08.2025-இல் வெளியிடப்பட்டது. இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 11.10.2025 அன்று நடைபெற்றது.இத்தேர்விற்கான நேர்முகத்தேர்வு 26.11.2025 முதல் நடைபெற இருக்கிறது. இத்தேர்வில் வெற்றிபெற்றோர் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக இலவச மாதிரி நேர்காணல் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இம்மாதிரி நேர்காணலில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு நேர்காணல் குறித்த விழிப்புணர்வு மற்றும் தேர்ச்சி பெறுவதற்கான நுணுக்கங்கள் குறித்த ஆலோசனைகள் துறை வல்லுநர்களை கொண்டு 24.11.2025 திங்கள் அன்று காலை 10.30 மணியளவில் வழங்கப்பட உள்ளது.
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெறும் இம்மாதிரி இலவச நேர்காணலினை பயன்படுத்தி கொள்ளலாம். இதில் பங்கேற்க விரும்புவோர் studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது 93601-71161 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக வருகைபுரிந்து பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ர,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply