மாவட்டத்தில் 15,82,225 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் தொடர்பாக இதுவரை கணக்கெடுப்புப் படிவங்களைப் பெறாத வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (20.11.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 01.01.2026 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கியும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்பப் பெற்றும் வருகின்றனர். இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் 15,82,225 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக் கொள்வதை எளிதாக்குவதற்காகவும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைக் கண்டறிவதற்கு உதவி செய்வதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும், நிரப்பப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப அளிப்பதற்காகவும், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் 19.11.2025 மற்றும் 20.11.2025 ஆகிய 2 நாட்கள் சிறப்பு முகாம்கள் விருதுநகர் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.அதன்படி, விருதுநகர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வாக்குச்சாவடி மையங்களான மீசலூர் த.அ.சீனிவாசா அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் செவல்பட்டி தாமு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற்று வரும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
0
Leave a Reply