25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் நீர்நிலைகளிலிருந்து  கட்டணமில்லாமல் வண்டல் மண் / களிமண் எடுக்க  இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் நீர்நிலைகளிலிருந்து கட்டணமில்லாமல் வண்டல் மண் / களிமண் எடுக்க இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு வட்டத்தில் 49 நீர்நிலைகளும், சிவகாசி வட்டத்தில் 11 நீர்நிலைகளும், இராஜபாளையம் வட்டத்தில் 44 நீர்நிலைகளும், காரியாபட்டி வட்டத்தில் 16 நீர்நிலைகளும், திருச்சுழி வட்டத்தில் 47 நீர்நிலைகளும், விருதுநகர் வட்டத்தில் 13 நீர்நிலைகளும், சாத்தூர் வட்டத்தில் 28 நீர்நிலைகளும், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் 46 நீர்நிலைகளும்;, அருப்புக்கோட்டை வட்டத்தில் 17 நீர்நிலைகளும், வெம்பக்கோட்டை வட்டத்தில் 12 நீர்நிலைகளும் என மொத்தம் 283 நீர் நிலைகள் தகுதி வாய்ந்த நீர் நிலைகளாக கண்டறியப்பட்டு விருதுநகர் மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.4, நாள்:29.06.2024 மற்றும்; மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.5, நாள்:01.07.2024-ன்படி அனுமதி அளித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் மேற்குறிப்பிட்டுள்ள அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள தகுதி வாய்ந்த நீர்நிலைகளிலிருந்து கட்டணமில்லாமல் வண்டல் மண் / களிமண் எடுக்க அனுமதி வேண்டி tnesevai.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பத்தினை பதிவு செய்து சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அளவிலேயே இணைய வழியில் அனுமதி பெற்று பயன்பெறலாம் என மவாட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S.,  அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News