யானைகள் சேதப்படுத்திய தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை .
பலா, மா அறுவடை சீசன் தொடங்கி ,ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மா, தென்னை, வாழை, பலா ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இந்த பலாப்பழங்களை உண்ண வனப்பகுதியை விட்டு வெளியே யானைகள் கூட்டம்,கூட்டமாக வருகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தம்பாத்து ஊருணி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக தோப்புக்குள் புகுந்து 25-க்கு மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு சாய்த்து ,தென்னை மரங்கள், பலா பழங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தி விட்டன என அப்பகுதி விவசாயிகள் கூறினர்
இரவுநேரங்களில் காட்டுப்பன்றிகளும் அதிக அளவில் தோட்டத்துக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. எனவே தோட்டத்திற்குள் யானைகள், காட்டுப்பன்றி கள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் அதேபோல பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கூறினர்.
0
Leave a Reply