நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க அத்திப்பழம்...
அத்தி காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தி ஏற்படும். பித்தம் தணியும். வெள்ளைப்படுதலை தடுக்கும். அத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. சிறுநீரகத்தில் கல்லடைப்பு போன்ற தடங்கல்களை அகற்றிச் சிறுநீரைப் பெருக்குகிறது. பெருங்குடலில் ஆங்காங்கே, இறுகிய கழிவுப் பொருட்களை பக்குவப்படுத்தி, இளக்கி, வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி குடலை மிருதுவாகச் செய்கிறது. அத்திப்பழத்தில் இருக்கும் அதீத நார்ச்சத்து மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
அத்திப்பழத்தை இரவில் நீரில் ஊறவைத்து1 அல்லது2 சாப்பிடலாம். இதன் மூலம்விரைவாக எடை குறைகிறது. சருமம் மென்மையாகிறது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. முடி வளர்ச்சி அதிகரிக்கிறது. தோல் சுருக்கம் நீக்குகிறது. கண்களுக்கு குளிர்ச்சி.நீரிழப்பை தடுக்கும். கல்லீரலை பாதுகாக்கும், ரத்த ஓட்டம் சீராகும். தீராத தலைவலியும் தீரும். வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
0
Leave a Reply