நல்ல வருமானம் தரும் உளுந்து சாகுபடி முறை..
ஆடி, மாசி ஆகியபருவகாலங்கள் உளுந்துசாகுபடிக்கு ஏற்றபருவகாலங்கள் ஆகும்.வெப்பம் மற்றும் மிதவெப்பமண்டலங்களில் உளுந்துபயிர் அதிகமாகசாகுபடி செய்யப்படுகிறது.நல்ல வடிகால் வசதிகொண்ட வளமானமண் உளுந்துசாகுபடிக்கு ஏற்றது. அதேபோல் உளுந்துஎல்லா வகைமண்ணிலும் சாகுபடிசெய்தாலும் வண்டல்மண், உளுந்துசாகுபடிக்கு மிகவும்சிறந்தது.டிஎம்வி 1, டி 9 மற்றும்கோ9 ஆகியஇரகங்கள் உளுந்துசாகுபடிக்கு மிகவும்ஏற்ற இரகங்கள்ஆகும்.ஒரு ஏக்கருக்கு8 கிலோவிதைகள் உளுந்துசாகுபடிக்கு போதுமானது.ஆறிய அரிசி வடிகஞ்சியுடன்200 கிராம் அளவுஅடுப்பு சாம்பலைநன்றாக கலந்துஇவற்றை8 கிலோவிதைகளுடன் கலந்துகொள்ளனும்.
உயிர் உரவிதை, நேர்த்திசெய்யரைசோபியம்200 கிராம்,பாஸ்போபாக்டிரியா200 கிராம் ஆகியவற்றைஆறிய வடிகஞ்சியில்கலந்து விதைநேர்த்தி செய்து,நிழலில் உலர்த்திவிதை நேர்த்திசெய்யவேண்டும்.இரண்டு முதல் மூன்றுமுறை நிலத்தைபுழுதிப்பட உழுதுநிலம் தயார்செய்ய வேண்டும்.செடிக்குச் செடி ஒருசெ.மிஇடைவெளியும், வரிசைக்குவரிசை 10 செ.மி இடைவெளியும்விட வேண்டும்.
உளுந்து சாகுபடி: விதைப்பதற்குமுன் அடியுரமாகமானாவாரிப் பயிராகஇருந்தால் ஏக்கருக்கு12.5 கிலோ தழைச்சத்து,25 கிலோ மணிச்சத்து, 12.5 கிலோ சாம்பல்சத்து மற்றும் 10 கிலோ கந்தகச்சத்துஇடவேண்டும். இறவைப்பயிராக இருந்தால்ஏக்கருக்கு 25 கிலோதழைச்சத்து, 50 கிலோமணிச்சத்து, 50 கிலோசாம்பல் சத்துமற்றும் 20 கிலோகந்தகச்சத்து இடவேண்டும்.
மானாவாரி மற்றும் இறவைப்பயிர்களுக்கு டைஅம்மோனியம் பாஸ்பேட்2 சதவீதம் அல்லதுயூரியா2 சதவீதம்பூக்கும் தருணத்திலும்பின்பு15 நாள்கழித்தும் தெளிக்கவேண்டும்.உயிர் உரமாக ரைசோபியம்2 கிலோ, பாஸ்போபாக்டீரிய2 கிலோ ஆகியஉயிர் உரத்துடன்,50 கிலோ ஈரப்பதம்உள்ள மக்கியதொழு உரத்துடன்கலந்து அடியுரமாகஇடவேண்டும்.
நடவு செய்த15ம்நாள் ஒருமுறையும், பின்பு30ம் நாள்ஒரு முறையும்களை நிர்வாகம்கண்டிப்பாக செய்யவேண்டும். பயிர்சாகுபடியில் சரியானதருணத்தில் களைநிர்வாகம் செய்யாமல்இருந்தால், கண்டிப்பாகபயிர் வளர்ச்சிபாதிக்கப்பட்டு மகசூல்குறைந்து விடும். எனவே சரியானதருணத்தில் களைநிர்வாகம் செய்யவேண்டியது மிகவும்அவசியம்.
விதை முளைக்கும் பருவம்,பூ பூக்கும்பருவம், காய்வளர்ச்சி பருவம்ஆகிய பருவங்களில்கண்டிப்பாக பயிர்களுக்குநீர் நிர்வாகம்செய்ய வேண்டியதுஅவசியம்.முதிர்ந்த காய்களைப் பறித்துஉலர்த்த வேண்டும்.அறுவடை செய்யும்போதுபயிர்களை வேரோடுபிடுங்க வேண்டும்.இல்லையெனில் முழுதாவரத்தையும் வெட்டிஎடுக்க வேண்டும்.பின்னர் குவித்துவைத்து உலர்த்திபயிர்களை பிரிக்கவேண்டும்.
0
Leave a Reply