முதல் போட்டியில் ஆசிய கோப்பை கால் பந்தில் (20 வயது) இந்திய பெண்கள் அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.
பெண்களுக்கான (20 வயதுக்கு உட்பட்ட) ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 12வது சீசன், பிரிவிலும் வரும் ஏப்.1-18ல் தாய்லாந்தில் ,மொத்தம் 12 அணிகள் மூன்று பிரிவுக ளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முதல் இரு இடம் பெறும் 6 அணிகள், 3வது இடம் பிடித்த சிறந்த 2 அணிகள் சேர்த்து, 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.
இந்தியா 20 ஆண்டுகளுக்கு பின் இத்தொடரில் பங்கேற்க தகுதி பெற்றது. இம்முறை ‘குரூப் ஆப் டெத்' என்றழைக்கப்படும் சி' பிரிவில், 6 முறை கோப்பை வென்ற, ஆசி யாவின் 'நம்பர்-1' அணி, நடப்பு சாம்பியன் ஜப்பான், வலிமையான ஆஸ்திரேலியா, சீன தைபே அணிகள் உள்ளன.இதற்கான அட்டவணை நேற்று வெளியானது. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஜப்பானை ஏப்., 2ல் எதிர்கொள்கிறது. அடுத்து ஏப்., 5ல் ஆஸ்திரேலியா, ஏப்., 8ல் சீன தைபேவுடன் மோதுகிறது.
0
Leave a Reply