தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 21.04.2026 முதல் 23.04.2026 வரை மூன்று நாட்களும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 04.05.2026 அன்றும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் உத்தரவு.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் FL-1/ FL_2/ FL_3/FL_3A/ FL-3AA, FL_4A/மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி, எதிர்வரும் 23.04.2026 அன்று நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 21.04.2026 முதல் 23.04.2026 (செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வரையிலும் மற்றும் 04.05.2026 (திங்கள் கிழமை ) அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் தற்காலிகமாக முடுவதற்கு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப. அவர்கள் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளர்.
மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் FL-1/ FL_2/ FL_3/FL_3A/ FL-3AA, FL_4A/மற்றும் FL-11 ஆகிய மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981 நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply