அரிசி உற்பத்தியில் இந்தியா உலக சாதனை.
உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளர் நாடாக இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. இதுவரை முதலிடத்தில் இருந்த சீனாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியா சுமார் 150 மில்லியன் டன் அரிசி உற்பத்தி செய்துள்ளது. அதே நேரத்தில் சீனாவின் உற்பத்தி 145 மில்லியன் டன்னாக உள்ளது. இந்திய விவசாயிகளின் உழைப்பு, மேம்பட்ட வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் உற்பத்தித் திறன் உயர்வு ஆகியவற்றின் விளைவாக இந்த வெற்றி கிடைத்துள்ளது. நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்படுத்தும் முக்கிய மைல்கல்லாக இது கருதப்படுகிறது.
0
Leave a Reply