25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பிரதமர் மோடி 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரதமர் மோடி "2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா தயாராகி வருகிறது," என தெரிவித்தார்.

72வது சீனியர் தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் தொடர் நேற்றுஉ.பி.,யின் வாரணாசியில் துவங்கியது. 58 அணிகளை சேர்ந்த ஆயிரம் வீரர், வீராங்கனைகள்,நாடு முழுவதும் இருந்து பங்கேற்கின்றனர். இத்தொடரை, பிரதமர் மோடி டில்லியில் இருந்து 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்தார்.

 ஒலிம்பிக் பதக்க இலக்கு' திட்டத்தால், நாட்டின் விளையாட்டு கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.  நம் இளம் நட்சத்திரங்கள் சர்வதேச போட்டிகளில்ஜொலிக்க ,வலுவான உட்கட்டமைப்பு, நிதி உதவி போன்றவை உதவியுள்ளது. இந்தியாவில், கடந்த 10 ஆண்டு களில், 'பிபா' 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து, உலக கோப்பை ஹாக்கி, பெரிய செஸ் தொடர்கள் உட்பட 20 சர்வதேச போட்டிகள் நடந்துள்ளன. 

"கேலோ இந்தியா' விளை யாட்டு மூலம் நுாற்றுக்க ணக்கான இளைஞர்கள் தேசிய அளவிலான போட் டிகளில் பங்கேற்கின்றனர். வரும் 2030ல் இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு நடக்க உள்ளது. 2036ல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவற்கு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். 'மெகா' விளையாட்டுகளை நடத்துவதால், நமது வீரர், வீராங்கனைகளுக்கு அதிகளவில் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கிறதுஎன பிரதமர் மோடி தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News