பிரதமர் மோடி "2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா தயாராகி வருகிறது," என தெரிவித்தார்.
72வது சீனியர் தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் தொடர் நேற்றுஉ.பி.,யின் வாரணாசியில் துவங்கியது. 58 அணிகளை சேர்ந்த ஆயிரம் வீரர், வீராங்கனைகள்,நாடு முழுவதும் இருந்து பங்கேற்கின்றனர். இத்தொடரை, பிரதமர் மோடி டில்லியில் இருந்து 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்தார்.
ஒலிம்பிக் பதக்க இலக்கு' திட்டத்தால், நாட்டின் விளையாட்டு கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நம் இளம் நட்சத்திரங்கள் சர்வதேச போட்டிகளில்ஜொலிக்க ,வலுவான உட்கட்டமைப்பு, நிதி உதவி போன்றவை உதவியுள்ளது. இந்தியாவில், கடந்த 10 ஆண்டு களில், 'பிபா' 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து, உலக கோப்பை ஹாக்கி, பெரிய செஸ் தொடர்கள் உட்பட 20 சர்வதேச போட்டிகள் நடந்துள்ளன.
"கேலோ இந்தியா' விளை யாட்டு மூலம் நுாற்றுக்க ணக்கான இளைஞர்கள் தேசிய அளவிலான போட் டிகளில் பங்கேற்கின்றனர். வரும் 2030ல் இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு நடக்க உள்ளது. 2036ல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவற்கு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். 'மெகா' விளையாட்டுகளை நடத்துவதால், நமது வீரர், வீராங்கனைகளுக்கு அதிகளவில் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கிறதுஎன பிரதமர் மோடி தெரிவித்தார்.
0
Leave a Reply