இந்திய வீராங்கனை சவிதா ஹாக்கி உலக கோப்பைக்கு தகுதி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் கூறினார்.
கடந்த2025ல் இந்திய ஹாக்கி அணி, சிறப்பாக செயல் படவில்லை. புரோ லீக் தொடரில்16 போட்டியில்10 புள்ளி மட்டும் பெற்று, வெளியேறியது. உலக கோப்பைக்கு(வரும் ஆக.14,30, பெல்ஜியம், நெதர்லாந்து) நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.ஐதராபாத்தில் நடக்க உள்ள உலக கோப்பை தகுதிச்சுற்றில்,புதிய பயிற்சியாளர் மரிஜ்னே தலைமையில்(மார்ச்8,14) பங்கேற்க உள்ளது.இதில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் உலக கோப்பை தொடருக்கு 'டாப்-3' இடம் பெறும் அணிகள் முன்னேறும்.
விளையாட்டில் ஏற்ற, இறக்கம் சகஜம் தான். கடந்த ஆண்டு எங்களுக்கு மோசமாக அமைந்தது. வீராங்கனைகளிடம் போதிய உடற்தகுதி ('பிட்னஸ்') இல்லாதது தான் முக்கிய காரணம். 'பிட்னஸ்' சரியாக இருந்ததால் தான், டோக்கியோ ஒலிம்பிக்கில் 4வது இடம் பெற்றோம்.மீண்டும் தற்போது சறுக்கி விட்டோம். உலக கோப்பை தகுதிச்சுற்று மிக முக்கியம் என்பதை அனைவரும் அறிந்துள்ளனர். இதில் வெற்றி பெற்று, உலக கோப்பைக்கு தகுதி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. தவிர அடுத்து வரும் ஆசிய விளையாட்டிலும் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம் என்று கோல்கீப்பர் சவிதா 35, கூறினார்.
0
Leave a Reply