யூத் டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடரில், இந்தியாவின் திவ்யான்ஷி இரண்டாவது இடம் பிடித்தார்.
யூத் டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடர்கத்தார் தலைநகர் தோஹாவில் ,17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் திவ்யான்ஷி, தென் கொரியாவின் உஇங் ஸ்யுவானை எதிர்கொண்டு முதல் செட்டை திவ் யான்ஷி 11-6 என கைப் பற்றினார். அடுத்த இரு செட்டை 5-11, 4-11 என இழந்தார்.4வது செட்டை 11-4 என வென்று பதிலடி தந்தார். வெற்றியாளரை முடிவு செய்யும் 5வது, கடைசி செட்டில் திவ்யான்ஷி, 5-11 என நழுவவிட்டார். முடிவில் திவ்யான்ஷி 2-3 என்ற செட் கணக்கில் தோல்வி யடைந்து, இரண்டாவது இடம் பிடித்தார்.
இந்தியா வின் ஆதித்யா, அன்கோ லிகா ஜோடி, 15 வயதுக்கு உட்பட்ட கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் ,ஸ்பெயினின் அலெக்சாண்டர், ஆஸ்திரி யாவின் சோபியா ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய 4 3-0 (11-4, 11-9, 11-7) என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.
0
Leave a Reply