இந்தியாவின் துளசிமதி முருகேசன் பாரா பாட்மின்டனில் மூன்று தங்கம் வென்றார்.
சர்வதேச பாரா பாட் மின்டன் தொடர் எகிப்தின் கெய்ரோவில் ,பெண்கள் ஒற்றையர் (எஸ்.யு 5) பிரிவு பைனலில் இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த, துளசிமதி முருகேசன் 23,போர்ச்சுகலின் பியாட்ரிசை எதிர் கொண்டார்.
துளசிமதி, 21-8, 21-10 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றார். * பெண்கள் இரட்டையரில் இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற, இந்தியாவின் துளசிமதி, மானசி ஜோடி, பைனலில் 21-8, 21-10 என இந்தியாவின் துலிகா, பியாட்ரிஸ் (போர்ச்சுகல்) ஜோடியை, வென்றுதங்கம் கைப்பற்றியது.
இந்தியாவின் துளசிமதி, நிதிஷ் குமார் ஜோடி, கலப்பு இரட்டையர் பைனலில் 21-15, 21-8 என்ற நேர் செட்டில், இந்தியாவின் ருத்திக், மானசி ஜோடியை சந்தித்து, தங்கம் வென்றது.
இந்தியாவின் பிரமோத் பஹத், ஆண்கள் ஒற்றையர் பைனலில் 19-21, 21-15-21-13 என்ற செட் கணக்கில் இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற சக வீரர் உமேஷ் விக்ரம் குமாரை வென்று, தங்கம் கைப்பற்றினார். இந்தியா இத்தொடரில் 8 தங்கம், 9 வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியது.
0
Leave a Reply