சர்வதேச பாரா பாட்மின்டன்: தமிழக வீராங்கனைகள் துளசிமதி, நித்யஸ்ரீ ‘தங்கம்’ வென்று சாதனை
அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்ற பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் சர்வதேச பாரா பாட்மின்டன் தொடரில், தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.
ஒற்றையர் பிரிவில் அசத்தல்
துளசிமதிக்கு தங்கம்: பெண்கள் ஒற்றையர் எஸ்.யு.5 (SU5) பிரிவின் இறுதிப்போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த துளசிமதி சக இந்திய வீராங்கனையான மனிஷாவை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய துளசிமதி 21-12, 21-19 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.
நித்யஸ்ரீக்கு தங்கம்: இதேபோல் பெண்கள் ஒற்றையர் எஸ்.எச்.6 (SH6) பிரிவின் இறுதிப்போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த நித்யஸ்ரீ 21-12, 21-12 என்ற கணக்கில் இந்தோனேசியாவின் ஆலிவியாவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
இரட்டையர் பிரிவில் பதக்கங்கள்
வெள்ளிப் பதக்கம்: பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் துளசிமதி - மானஷி ஜோடி 14–21, 21-13, 17-21 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் ஆக்டிலா - சாடியா ஜோடியிடம் போராடித் தோற்று வெள்ளிப்பதக்கம் பெற்றது.
வெண்கலப் பதக்கம்: கலப்பு இரட்டையர் பிரிவில் துளசிமதி - நிதேஷ் குமார் ஜோடி வெண்கலப் பதக்கத்தை தன்வசப்படுத்தியது.
இந்தத் தொடரில் ஒற்றை ஆளாக தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்று துளசிமதி சாதனை படைத்துள்ளார்.
0
Leave a Reply