25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


மகிழ்ச்சி நிலைக்க குழித்துறை  மகாலட்சுமி கோயில்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மகிழ்ச்சி நிலைக்க குழித்துறை  மகாலட்சுமி கோயில்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் உள்ள குழித்துறையில் மகாலட்சுமி கோயில் உள்ளது. இங்கு வழிபட்டால் பணம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.

300 ஆண்டுக்கு முன்பு கேரளாவில் இருந்து தேவியர் சிலைகள் குழித்துறை பகுதிக்கு வந்தன. அதில் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள மகாதேவர் கோயிலுக்கு அருகில் கிழக்கு நோக்கி சாமுண்டிதேவி கோயிலும், சற்று தொலைவில் வடக்கு நோக்கி மகாலட்சுமி கோயிலும் அமைக்கப்பட்டன.

மகாலட்சுமிக்கு தனி கோயில் இருப்பது மிக அபூர்வம். நின்ற நிலையில் உள்ள மகாலட்சுமியின் சிலை 3/4 அடி உயரம் கொண்டது. தாயாரின் கருணையான முகமும், வலது கையில் கொடுவாளும், இடது கையில் பாசக்கயிறும், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரமும்,தாமரை மீதமர்ந்த கோலமும் தரிசிப்போரின் பாவத்தை போக்கி விடும். கன்னி மூலையில் கணபதி, இடதுபுறம் பூதத்தான் சன்னதிகள், வெளிப்புறம் மடப்பள்ளி, அருகில் பஜனை மடம் உள்ளன.

வெள்ளி அன்று மகாலட்சுமிக்கு பால் பாயாசம் நைவேத்யம் செய்தால் பணப் பிரச்னை வராது. பணப்புழக்கம் அதிகரிக்கும். காஞ்சி மஹாபெரியவர் இங்கு தரிசனம் செய்துள்ளார். பகவதி சேவை (ஐஸ்வர்ய பூஜை) தனலட்சுமி பூஜை, சுயம்வர அர்ச்சனை, லலிதா சகஸ்ரநாமம், சண்டிகா ஹோமம் போன்றவை நடக்கின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News