25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் பொன்னகரம் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா >> ராஜபாளையத்தில் அரசு ஆஸ்பத்திரி புதியகட்டிடம் திறப்பு விழா . >> தைப்பூச திருவிழா முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு >> மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா >> ராஜபாளையம் மட்டுமின்றி சுற்றியுள்ள  நகரங்கள் ,கிராமங்களில் நேற்றிரவு 9 :08 மணிக்கு 3 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் . >> ராம்கோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி கருத்தரங்கில் குழந்தை திருமணத்தைத் தடுக்க சமூக வலைதளங்களை கருவியாக பயன்படுத்த வேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. >> சாலை விரிவாக்க ஆக்கிரமிப்பு அகற்றுவதில், முறையாக அளவீடு செய்யாமல் பணிகள் நடப்பதாக  விவசாயிகள் குற்றச்சாட்டு . >> சேத்தூர் அடுத்த கோவிலுாரில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. >> தென்னையை தாக்கும் சாறு உறிஞ்சி பூச்சிகளான ரூகோஸ் வெள்ளை ஈக்கள் . >> ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >>


மகாசிவராத்திரி வழிபாடு .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மகாசிவராத்திரி வழிபாடு .

 பிரம்மா மற்றும் விஷ்ணு இடையே 'யார்  பெரியவர்'  என்ற போட்டி வந்தபோது சிவன்.  ஜோதி பிழம்பாக அவர்கள் முன் தோன்றினார். 

அந்த நெருப்புத் தூணின் அடிமற்றும் முடியைக் காண முடியாத நாளே மகாசிவராத்திரி.

இது ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி (அமாவாசைக்கு முந்தைய நாள்) அன்று கொண்டாடப்படுகிறது.

இந்த நான்கு காலமும் விழித்திருக்க முடியாதவர் மூன்றாம் காலம் பார்வதிதேவி சிவனை வழிபாடும் நேரம் (15.2.26 இரவு 12 மணி முதல் 12.30 வரை விழித்திருக்கலாம்.)

(15-02-2020) விரதம் துவங்கும் நாள் அன்று முழுவதும் உபவாசம் இருக்கலாம், (அல்லது) பால், பழம் மட்டும் உண்ணலாம்.

விரதம் நிறைவு செய்யும் நாள்& நேரம் (16-02-2026) காலை 04:00 மணிக்குள்  உங்கள் வேண்டுதலை சிவனிடம் வேண்டிக் கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

சிவன் வழிபாடோடு குலதெய்வத்தை வழிபாடு செய்வது குலதெய்வத்தின் அருள் பெற வழிவகுக்கும்.

சிவராத்திரி, சிவன்-பார்வதி திருமணம் நிச்சயமான நாள், 

தேவர்கள் தங்கம், வெள்ளி, முத்துகளை பரிசாக கொண்டு வந்தார்கள்.

ஆனால்,துறவியான சிவபெருமானிடம் செல்வம் இல்லை. இருப்பினும், பார்வதிக்கு ஒரு சிறப்பு பரிசு கொடுக்க வேண்டும் என்ற ஆசை.அவர் தானே பச்சை லாக் வளையல்கள் செய்து, வேஷம் பூண்டு இமயமலையில் சென்று, அதை பார்வதியின் கைக்கு அணிவித்தார்.அந்த நிமிஷத்திலேயே பார்வதி அவரை அடையாளம் கண்டார்.

அப்போது சிவன் சொன்னார். 'இந்த பச்சை வளையல்கள்  சௌபாக்கியத்துக்கும், படைப்பின் சக்திக்கும் அடையாளம்.‘ஆகவே ,சிவராத்திரியில் பச்சை வளையல் அணிவது, பார்வதிக்கு சிவன் அளித்த முதல் பரிசை நினைவுபடுத்துவது.சிவராத்திரியில்  பச்சை வளையல்கள் அணிய வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News