25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழில் மூலப்பொருட்களை  விற்பனை செய்ய படைக்கலன் உரிமம் பெற்றுள்ள டிப்போக்கள் / டிரேடர்ஸ்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழில் மூலப்பொருட்களை விற்பனை செய்ய படைக்கலன் உரிமம் பெற்றுள்ள டிப்போக்கள் / டிரேடர்ஸ்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

விருதுநகர் மாவட்டத்தில், தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழில் மூலப்பொருட்களான சல்பர், பொட்டாசியம் குளோரேட் மற்றும் பொட்டாசியம் பெர் குளோரேட் ஆகிய இராசாயணப் பொருட்களை விற்பனை செய்ய படைக்கலன் உரிமம் படிவம் எண்:VIII--இன்படி உரிமம் பெற்றுள்ள டிப்போக்கள் / டிரேடர்ஸ்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் விதிமீறல்களினால் ஏற்படும் தீ / வெடி விபத்துகளினாலும், வீடுகளில் கள்ளத்தனமாக உரிய அனுமதியின்றி கருந்திரி உற்பத்தி செய்யும் போது ஏற்படும் வெடி விபத்துகளினாலும், தொடர்ந்து பல்வேறு உயிரிழப்புகளும் மற்றும் பலர் காயமடைந்தும் உள்ளனர்.

எனவே இது போன்ற விபத்துக்களைத் தவிர்க்கும் பொருட்டு, தீப்பெட்டி மற்றும் பட்டாசு உற்பத்திக்குத் தேவையான பட்டாசு உற்பத்தி செய்யும் மூலப்பொருள்களான சல்பர், குளோரேட் மற்றும் சிவப்பு பாஸ்பரஸ் ஆகிய இரசாயனப் பொருட்களை தீப்பெட்டி மற்றும் பட்டாசு உற்பத்தி செய்வதற்கு உரிய அனுமதி பெற்றுள்ள தொழிற்சாலையினருக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும்.
அவ்வாறின்றி தீப்பெட்டி மற்றும் பட்டாசு உற்பத்தி செய்வதற்குரிய உரிமம் இல்லாத தனி நபர்களுக்கு அத்தியாவசிய மூலப்பொருள்களான சல்பர், குளோரேட் மற்றும் சிவப்பு பாஸ்பரஸ் ஆகிய இரசாயனப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது.

அவ்வாறு விற்பனை செய்யப்படுவதாக கண்டறியப்படும்பட்சத்தில், தொடர்புடைய டிப்போக்கள் / டிரேடர்ஸ்கள் மீது படைக்கலச் சட்ட விதிகளின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமத்தினை இரத்து செய்து, அந்நிறுவனத்தினை நடத்தி வரும் உரிமதாரர் மீது சட்டப்படியான உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் விவசாயப் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் சல்பர், பாஸ்பரஸ் மற்றும் சிவப்பு பாஸ்பரஸ் போன்ற இரசாயனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களிடமிருந்து, விவசாயத் தேவைக்காக பெற்று மேற்படி மூலப்பொருட்களை தீப்பெட்டி மற்றும் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் கள்ளத்தனமாக உற்பத்தி செய்யப்படுவதாக தெரியவருகிறது.

எனவே விவசாயப் பயன்பாட்டிற்காக மேற்படி இரசாயனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் உரிய விதிமுறைகளின்படி விவசாயிகளுக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும், அவ்வாறில்லாமல் விவசாயப் பயன்பாட்டிற்காகப் பெறப்பட்ட மேற்படி மூலப்பொருட்களைச் சட்டத்திற்குப் புறம்பாக மேற்படி பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுவதாகத் தெரியவரும்பட்சத்தில், அந்நிறுவனத்தின் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அந்நிறுவனத்தினை நடத்தி வரும் உரிமதாரர் மீது சட்டப்படியான உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News