விருதுநகர் மாவட்டத்தில் சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 03.05.2025 அன்று நடைபெற உள்ளது
விருதுநகர் மாவட்டத்தில், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிகளில் சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 03.05.2025 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற இருக்கிறது.
03.05.2025 அன்று அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், பாலையம்பட்டி. ஆத்திபட்டி, ஸ்ரீவெங்கடேஷ்வரா மெட்ரிக்குலேசன் பள்ளி, கணேஷ் நகர். சென்னிலக்குடி, அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம் மற்றும் பொம்மையாபுரம், பல்நோக்கு கட்டிடத்திலும்,சாத்தூர் சட்டமன்ற தொகுதியில், சமுதாயக்கூடம், நத்தத்துபட்டி. சமுதாயக்கூடம், ஓ.மேட்டுப்பட்டி. தேவர்மண்டபம், அண்ணாநகர்(டவுன்), சாத்தூர். முருகன்கோவில் மண்டபம், சாத்தூர் டவுன். நாடார் மகமை துவக்கப்பள்ளி, ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை. வெம்பக்கோட்டை டவுன், அரசு மேல்நிலைப்பள்ளி, தாயில்பட்டி மற்றும் ஆலங்குளம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
கல்வியில், பொருளாதாரத்தில் மேம்பாடு அடைவதற்கான முயற்சியில் பங்கேற்று இவ்வாய்ப்பினை பயன்படுத்தி சீர்மரபினர் சமுதாய மக்கள் உறுப்பினர்களாக சேர்ந்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply