25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விருதுநகர் மாவட்டத்தில் சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்  03.05.2025 அன்று நடைபெற உள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டத்தில் சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 03.05.2025 அன்று நடைபெற உள்ளது

 விருதுநகர் மாவட்டத்தில், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிகளில் சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 03.05.2025 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை  நடைபெற இருக்கிறது.

03.05.2025 அன்று அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், பாலையம்பட்டி. ஆத்திபட்டி, ஸ்ரீவெங்கடேஷ்வரா மெட்ரிக்குலேசன் பள்ளி, கணேஷ் நகர். சென்னிலக்குடி, அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம் மற்றும் பொம்மையாபுரம், பல்நோக்கு கட்டிடத்திலும்,சாத்தூர் சட்டமன்ற தொகுதியில், சமுதாயக்கூடம், நத்தத்துபட்டி. சமுதாயக்கூடம், ஓ.மேட்டுப்பட்டி. தேவர்மண்டபம், அண்ணாநகர்(டவுன்), சாத்தூர். முருகன்கோவில் மண்டபம், சாத்தூர் டவுன். நாடார் மகமை துவக்கப்பள்ளி, ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை. வெம்பக்கோட்டை டவுன், அரசு மேல்நிலைப்பள்ளி,  தாயில்பட்டி மற்றும் ஆலங்குளம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

கல்வியில், பொருளாதாரத்தில் மேம்பாடு அடைவதற்கான முயற்சியில் பங்கேற்று இவ்வாய்ப்பினை பயன்படுத்தி சீர்மரபினர் சமுதாய மக்கள் உறுப்பினர்களாக சேர்ந்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News