தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்க தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (15.03.2026) திறந்து வைத்து பார்வையிட்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்க தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, தேர்தல் தொடர்பாக வரும் புகார்களை உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பிரத்தியேகமாக 24 X 7 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்வதற்கான கட்டணமில்லா எண்: 1800 425 2166 மற்றும் தொலைபேசி எண்: 04562 -294067, 04562 -294068, 04562-294069, 04562 -294070 ஆகும்.
எனவே, பொதுமக்கள் விருதுநகர் மாவட்டத்தில் தேர்த்ல் நடத்தை விதிமீறல்கள்(வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குதல், பணம் பதுக்கி வைத்தல் போன்ற விதிமீறல்கள்) ஏதுமிருப்பின் மேற்படி கட்டணமில்லா எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம்.மேலும், தகவல் தெரிவிக்கும் நபர் பற்றிய விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும். பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு தெரியப்படுத்தப்பட்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், I A S ., உட்பட அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.
0
Leave a Reply