25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >>


சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் அரசு மருத்துவமனையில் மகப்பேறு அடைந்த 40 தாய்மார்களுக்கு தாய் சேய் நல பெட்டகங்களை வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் அரசு மருத்துவமனையில் மகப்பேறு அடைந்த 40 தாய்மார்களுக்கு தாய் சேய் நல பெட்டகங்களை வழங்கினார்.

 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் (26.06.2026) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அரசு மருத்துவமனையில் மகப்பேறு அடைந்த 40 தாய்மார்களுக்கு தாய் சேய் நல பெட்டகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,  அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கார்த்திக் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

 தமிழ்நாடு அரசால் தாய் மற்றும் சேய் நலனைப் பேணும் வகையில் ”தாய் சேய் நல பெட்டகம்” வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் இப்பெட்டகம், பச்சிளங் குழந்தைகளின் ஆரம்பகால ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 அந்த வகையில் பச்சிளங் குழந்தை மற்றும் தாயின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தப் பெட்டகத்தில் குழந்தைக்கான ஆடைகள் மற்றும் துண்டு, படுக்கை மற்றும் கொசுவலை, பராமரிப்புப் பொருட்கள், சுகாதாரப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், தாய்க்கான குளியல் சோப்பு மற்றும் தாய்-சேய் சுகாதாரக் கையேடு உள்ளிட்டவை அடங்கிய சுமார் 16 வகையான பொருட்கள் வழங்கப்படுகின்றன.

 அதன்படி, விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று(26.06.2026) அரசு மருத்துவமனையில் மகப்பேறு அடைந்த 40 தாய்மார்களுக்கு தலா ரூ.1600/- மதிப்புள்ள தாய் சேய் நல பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன என  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி திலகம், மருத்துவர்கள், செவிலியர்கள், தாய்மார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News