25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியில் (09.09.2024) கால்நடை பராமரிப்புத் துறை சார்பில்,  9 புதிய நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள்  தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்  திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள், மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையில்  கால்நடை மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 200 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் சேவை (1962) 20.08.2024 அன்று துவக்கி வைக்கப்பட்டன.அதனடிப்படையில்,  இத்திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்திற்கு, ஒன்றியத்திற்கு 1 ஊர்தி வீதம் 11 ஒன்றியங்களுக்கு 11 ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 9 ஊர்திகள் தற்போது வரப்பெற்றுள்ளது. இந்த நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி ஒன்றிற்கு முதல் வருடத்திற்கு ரூ.24.10 இலட்சம் வீதம் மொத்தம் 11 ஊர்திகளுக்கு ரூ2.65 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

இந்த நடமாடும் மருத்துவ ஊர்திகள் மூலம் தொலைதூர கிராமங்களுக்கும், கால்நடை மருத்துவ சேவை இல்லாத கிராமப் பகுதிகளுக்கும், கால்நடை மருத்துவ சேவைகளை அந்தந்த இடத்திலேயே வழங்கிடவும், நோயுற்ற கால்நடைகளை நீண்ட தூரத்திற்கு அழைத்து செல்வதில் உள்ள சிரமங்களையும் , கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு ஏற்படும் நேர விரயத்தை தவிர்க்கும் நோக்கத்துடன் அப்பகுதியில் வசிக்கும் அனைத்து கால்நடை வளர்க்கும் விவசாயிகளும்  பயன்பெறும்  வகையில் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் செயற்கைமுறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, தடுப்பூசி, சினை ஆய்வு, மலடு நீக்க சிகிச்சை, கால்நடை மருத்துவ முகாமில் கலந்து கொள்ளுதல், கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பங்கேற்று உதவுதல் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் வார நாட்களில் ஞாயிறு தவிர பிற நாட்களில் காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் கால்நடைகளுக்குத் தேவையான சேவைகள் வழங்கப்படும். மேலும் 1962 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவசர அழைப்புகளை ஏற்று மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும்  இச்சேவையை கால்நடை வளர்ப்போர் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம் என மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர், மரு.பி.டி.ஆர்.தியோபிலஸ் ரோஜர் மற்றும் துணை இயக்குநர், உதவி இயக்குநர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள் உள்ளிட்ட  கால்நடை பராமரிப்புத்துறை  அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும்அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News