உலகவிளையாட்டில் பெண்களுக்கான உஷூ போட்டியில், நம்ரதா பத்ரா வெள்ளி வென்றார்.
12வது சீசன்உலக விளையாட்டு சீனாவில் ,இந்தியா சார்பில் 17 பேர்(10 வீரர்,7 வீராங்கனை), வில்வித்தை, பில்லியர்ட்ஸ், ராக்கெட்பால், ஸ்பீடு ஸ்கேட்டிங், உஷு என 5 வகையான விளையாட்டில் பங்கேற்கின்றனர்.
இந்தியாவின் நம்ரதா பத்ரா, பெண்களுக்கான உஷூ போட்டி,'சாண்டா'52 கி.கி., பிரிவில், பைனலுக்கு முன்னேறினார். நேற்று நடந்த பைனலில், நம்ரதா, சீனாவின் மெங்யூ செனை சந்தித்தார். இதில் நம்ரதா 0/2 என தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இதையடுத்து உலக விளையாட்டு உஷூ போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய நட்சத்திரம் என சாதனை படைத்தார்.
ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி யில், ஆண்களுக்கான அரையிறுதி முதல் 'ஹீட்டில்' இந்தியாவின் ஆர்யன்பால், 34.849 புள்ளியுடன் நான்காவது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.
0
Leave a Reply