சொத்து பத்திரத்தில் புதிய கட்டாய விதி.
தமிழகத்தில் வீடு அல்லது மனை வாங்கும்போது இனி முக்கியமான மாற்றம் வருகிறது.
1.சொத்து பத்திரத்தில் இனி ஜி.பி.எஸ் (GPS) லொகேஷன் விவரம் கட்டாயமாக இணைக்கப்பட உள்ளது.
2.சொத்து உண்மையில் அந்த இடத்திலேயே உள்ளதா, என்பதை உறுதி செய்ய இந்த நடைமுறை கொண்டு வரப்படுகிறது.
3.சொத்து விற்பவர் அந்த இடத்தின் முன் நின்று புகைப்படம் எடுத்து ,பத்திரத்தில் இணைக்க வேண்டும்.
4.பதிவுத்துறைதற்போது 'STAR 3.0' என்ற புதிய டிஜிட்டல் மென்பொருள் மூலம் காகிதமில்லா பத்திரப்பதிவு முறையை கொண்டு வர முயற்சி செய்கிறது.
5. இதன் மூலம் நிலத்தின் துல்லியமான இடத்தை GPS மூலம் கண்டறிந்து பதிவு செய்ய முடியும்.
இந்த புதிய முறையால் போலி நிலங்கள், தவறான பதிவுகள் போன்ற பிரச்சனைகள் குறையும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
0
Leave a Reply