25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில்,992  மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு  வங்கி கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில்,992 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

  தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சேலத்தில்  (16.09.2025)  நடைபெற்ற அரசு விழாவில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு ரூ.3500 கோடி வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், இன்று (16.09.2025) நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள  992  மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 10,996 மகளிர்களுக்கு ரூ.95.69 கோடி மதிப்பிலான வங்கி கடன் இணைப்புகள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள்  வழங்கினார்.

 அதன்படி, தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், ஊரக பகுதி அளவில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களில், அருப்புக்கோட்டை  வட்டாரத்தில், 60 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.513.39 இலட்சம் மதிப்பிலும், காரியாபட்டி வட்டாரத்தில், 53 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.500.06 இலட்சம் மதிப்பிலும், நரிக்குடி வட்டாரத்தில் 118 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு  ரூ.1166.00 இலட்சம்  மதிப்பிலும், இராஜபாளையம்  வட்டாரத்தில், 55 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ602.32 இலட்சம் மதிப்பிலும், சாத்தூர் வட்டாரத்தில் 52 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.511.00 இலட்சம் மதிப்பிலும், சிவகாசி வட்டாரத்தில் 71  மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு  ரூ.794.94 இலட்சம் மதிப்பிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் 58 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.537.58 இலட்சம் மதிப்பிலும், திருச்சுழி வட்டாரத்தில் 50 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு  ரூ.523.89 இலட்சம் மதிப்பிலும், வெம்பக்கோட்டை வட்டாரத்தில் 48 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 503.24 இலட்சம் மதிப்பிலும், விருதுநகர் வட்டாரத்தில் 74 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.689.93 இலட்சம் மதிப்பிலும், வத்ராயிருப்பு வட்டாரத்தில் 41 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு  ரூ.506.25 இலட்சம் மதிப்பிலும், சமுதாய முதலீட்டு நிதி 100 குழுக்களுக்கு ரூ 109 இலட்சம் மதிப்பிலும், வட்டார வணிக வள மையத்தில் உள்ள 72 உறுப்பினர்களுக்கு ரூ. 37 இலட்சம் மதிப்பிலும், வணிகக் கடன் உதவியாக 233 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ. 254.70 இலட்சம் மதிப்பிலும்  என மொத்தம் 780 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 8736 மகளிர்களுக்கு ரூ. 72.49 கோடி மதிப்பிலும்,

 நகராட்சி மற்றும் பேரூராட்சி அளவில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களில், அருப்புக்கோட்டை  நகராட்சியை சேர்ந்த 28 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.355.70 இலட்சம் மதிப்பிலும், இராஜபாளையம்  நகராட்சியை சேர்ந்த 21 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.251.15 இலட்சம் மதிப்பிலும், காரியாபட்டி பேரூராட்சியை சேர்ந்த 04 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.36.00 இலட்சம் மதிப்பிலும், சாத்தூர்  நகராட்சியை சேர்ந்த 10 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.139.68 இலட்சம் மதிப்பிலும், சிவகாசி  நகராட்சியை சேர்ந்த 19 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.242.75 இலட்சம் மதிப்பிலும், சுந்தரபாண்டியம்  பேரூராட்சியை சேர்ந்த 04 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.36.45 இலட்சம் மதிப்பிலும், செட்டியார்பட்டி  பேரூராட்சியை சேர்ந்த 04 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.63.24 இலட்சம் மதிப்பிலும், சேத்தூர்  பேரூராட்சியை சேர்ந்த 12 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.153.92 இலட்சம் மதிப்பிலும், திருத்தங்கல்  நகராட்சியை சேர்ந்த 16 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.223.34 இலட்சம் மதிப்பிலும், திருவில்லிபுத்தூர் நகராட்சியை சேர்ந்த 43 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.448.04 இலட்சம் மதிப்பிலும்,  மம்சாபுரம் பேரூராட்சியை சேர்ந்த  8 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.74.00 இலட்சம் மதிப்பிலும், மல்லாங்கிணறு பேரூராட்சியை சேர்ந்த  01 மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.6.00 இலட்சம் மதிப்பிலும், வ.புதுப்பட்டி பேரூராட்சியை சேர்ந்த  2 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.17.00 இலட்சம் மதிப்பிலும், வத்திராயிருப்பு பேரூராட்சியை சேர்ந்த  03 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.32.00 இலட்சம் மதிப்பிலும், விருதுநகர் நகராட்சியை சேர்ந்த  18  மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.229.00 இலட்சம் மதிப்பிலும், சுழல் நிதியாக 19 குழுக்களுக்கு ரூ.8.35 இலட்சம் மதிப்பிலும், சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், தனிநபர் தொழில் வங்கி கடனாக 5 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.3.00 இலட்சம் மதிப்பிலும், என மொத்தம் 212 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 2260 மகளிர்களுக்கு ரூ. 23.19 கோடி மதிப்பிலும்,

 ஆக  மொத்தம் மாவட்டத்தில், ஊரகம், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 992 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 10,996 மகளிர்களுக்கு ரூ.95.69 கோடி மதிப்பிலான வங்கி கடன் உதவிகள் மற்றும் அடையாள அட்டைகளை மாவட்ட  ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.கேசவதாசன், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பாண்டி செல்வம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.ஜெகதீசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திரு.சுப்பிரமணியன்,  உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) திருமதி வசுமதி, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News