25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தேசிய குடற்புழு நீக்க தினம்-2026 னை முன்னிட்டு, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர்  அவர்கள் துவக்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேசிய குடற்புழு நீக்க தினம்-2026 னை முன்னிட்டு, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர்  அவர்கள் துவக்கி வைத்தார்.

 விருதுநகர் மாவட்டம், காரியபட்டி வட்டம், ஆவியூர் ஊராட்சியில்  (10.02.2026), பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில், தேசிய குடற்புழு நீக்க தினம்-2026னை முன்னிட்டு, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் துவக்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டத்தில்  ஒரு வயது குழந்தை முதல் 19 வயது வரையுள்ள 5,78,289 சிறுவர், சிறுமியர்களுக்கும் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள 1,33,116 பெண்களுக்கும் குடற்புழுக்களால் ஏற்படும் இரத்த சோகை, உடல் சோர்வு, மனச்சோர்வு,  மூளை வளர்ச்சி குன்றுதல் போன்ற பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் பொருட்டு, அனைத்துக் குழந்தைகளுக்கும் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணிகளை  மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

 சுகாதார வசதிகள் குறைவாக உள்ள இடங்களில் மண்மூலம் குடற்புழு ஒட்டுண்ணிகளால் குடற்புழு  தொற்று பரவுவதால், குழந்தைகளின் வளர்ச்சியிலும் மற்றும் உடல்நலனிலும் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இதனால் அவர்களுக்கு இரத்தசோகை ஏற்படுகிறது.  இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது.எனவே, திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தாமலும் நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதனாலும்  இரத்தசோகை வராமல் தடுக்க முடியும்.இதனடிப்படையில், காரியாபட்டி வட்டம், ஆவியூர் ஊராட்சி ஒன்றிய  ஆரம்பப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மதிய உணவு உண்ட பின்னர்   மாவட்ட ஆட்சியர் அவர்கள் குடற்புழு நீக்க  மாத்திரை வழங்கினார்.

 மேலும், இம்மாத்திரைகளை தவறாமல் வாங்கி  மென்று உட்கொள்ளுமாறும் மற்றும் இதனை மருத்துவர்களும், பள்ளி ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும் எனவும், மேலும் விடுபட்ட சிறுவர், சிறுமியர்கள் மற்றும் பெண்களுக்கு வரும் 17.02.2026  அன்று குடற்புழு நீக்க  மாத்திரை வழங்கப்படும் எனவும்  மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.இவ்விழாவில்,  இணை இயக்குநர் மரு.எஸ்.செந்தில்குமார், விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.வே.யசோதாமணி,  மருத்துவ அலுவலர்கள் தலைமையாசிரியர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் ஆகியோர்   கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News