தேசிய குடற்புழு நீக்க தினம்-2026 னை முன்னிட்டு, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், காரியபட்டி வட்டம், ஆவியூர் ஊராட்சியில் (10.02.2026), பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில், தேசிய குடற்புழு நீக்க தினம்-2026னை முன்னிட்டு, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் துவக்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டத்தில் ஒரு வயது குழந்தை முதல் 19 வயது வரையுள்ள 5,78,289 சிறுவர், சிறுமியர்களுக்கும் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள 1,33,116 பெண்களுக்கும் குடற்புழுக்களால் ஏற்படும் இரத்த சோகை, உடல் சோர்வு, மனச்சோர்வு, மூளை வளர்ச்சி குன்றுதல் போன்ற பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் பொருட்டு, அனைத்துக் குழந்தைகளுக்கும் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
சுகாதார வசதிகள் குறைவாக உள்ள இடங்களில் மண்மூலம் குடற்புழு ஒட்டுண்ணிகளால் குடற்புழு தொற்று பரவுவதால், குழந்தைகளின் வளர்ச்சியிலும் மற்றும் உடல்நலனிலும் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இதனால் அவர்களுக்கு இரத்தசோகை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது.எனவே, திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தாமலும் நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதனாலும் இரத்தசோகை வராமல் தடுக்க முடியும்.இதனடிப்படையில், காரியாபட்டி வட்டம், ஆவியூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மதிய உணவு உண்ட பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கினார்.
மேலும், இம்மாத்திரைகளை தவறாமல் வாங்கி மென்று உட்கொள்ளுமாறும் மற்றும் இதனை மருத்துவர்களும், பள்ளி ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும் எனவும், மேலும் விடுபட்ட சிறுவர், சிறுமியர்கள் மற்றும் பெண்களுக்கு வரும் 17.02.2026 அன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.இவ்விழாவில், இணை இயக்குநர் மரு.எஸ்.செந்தில்குமார், விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.வே.யசோதாமணி, மருத்துவ அலுவலர்கள் தலைமையாசிரியர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply