25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை திட்டங்கள் மூலம் விவசாயிகள், விவசாய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள் மற்றும் தனிநபர் பட்டதாரிகள் தொழில்முனைவோராக மாற வாய்ப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை திட்டங்கள் மூலம் விவசாயிகள், விவசாய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள் மற்றும் தனிநபர் பட்டதாரிகள் தொழில்முனைவோராக மாற வாய்ப்பு

 விவசாயிகள், விவசாய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள் மற்றும் தனிநபர் பட்டதாரிகள் ஆகியயோர்களுக்கு அரசின் திட்டங்களை பயன்படுத்தி தொழில்முனைவோராக வருமானத்தை அதிகரித்து வாழ்க்கை தரத்தினை உயர்த்திட பின்வரும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை திட்டங்களை பயன்படுத்திட அறிவுறுத்தியுள்ளார்.
வேளாண்மை என்பது தற்போது வாழ்வாதார அடிப்பையிலான நடைமுறைகளிலிருந்து வணிகம் சார்ந்த அணுகுமுறைக்கு மாறுவது காலத்தின் அவசியமாகின்றது. விவசாயிகள் உற்பத்தி செய்வதோடு நிறுத்திவிடாமல் மதிப்புக்கூட்டுதல், சந்தைபடுத்துதல் போன்ற தொழிலை மேற்கொண்டு அதிக லாபம் பெற்று ஒரு தொழில்முனைவோராகி தங்களின் பொருளாதார நிலையை உயர்த்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

 இதற்கு துணைபுரியும் வகையில் மத்திய மாநில அரசுகள் தனிநபர் விவசாய தொழில்முனைவோரை உருவாக்க தொழில்முனைவோருக்கான பல்வேறு மானிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இதில் முதல் திட்டமாக வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் அறுவடைக்குப்பின்னான வேளாண் உட்கட்டமைப்பு வசதிகளான, முதன்மை பதப்படுத்தும் மையங்கள், விளைபொருள் சேமிப்பு கிட்டங்கி, குளிர்பதன கிட்டங்கி,  டரோன், தரம் பிரிப்பு மற்றும் வகைப்படுத்துவதற்கான இயந்திரங்கள், வாடகை இயந்திர மையங்கள், இயற்கை இடுபொருள் உற்பத்தி ஆகிய வசதிகளை ஏற்படுத்திட 3 சதவீத வட்டி தள்ளுபடியுடன், ரூ.2 கோடி வரை உத்தரவாதத்துடன் கூடிய வங்கி கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு துணைபுரியும் வகையில் வணிகத்திட்டம் தயாரித்தல், கருத்துரு தயாரித்தல், வங்கி கடன் பெற்று தருவது ஆகியவற்றிற்கு அரசு சார்பில் மாவட்ட ஆதார அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தனிநபர் விவசாயி, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், தனிநபர் தொழில்முனைவோர்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, கூட்டுறவு வங்கிகளில் 9 சதவிகித வட்டியில் கடன் பெற்று அதற்கு 3 சதவீத  வட்டித்தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம்.

சிறுதானிய பயிர் சாகுபடி மற்றும் மதிப்புக் கூட்டுதலை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு சிறுதானிய இயக்கத் திட்டத்தின் கீழ் தனிநபர், விவசாயி மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஆகியவர்களுக்கு மதிப்பு கூட்டு நிலையங்கள் அமைக்க தேவைப்படும் இயந்திரங்களான கல் தூசி நீக்குவது, தோல் நீக்கும் இயந்திரம், நிறத்தின் அடிப்படையில் தரம் பிரிக்கும் இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் சிப்பம் கட்டும் இயந்திரங்கள் கொள்முதல் செய்ய  மானியமாக 75 சதவீதம் என அதிகபட்சமாக ரூ.18.75 லட்சம்;; வரை வழங்கப்படுகின்றது.மேலும் மற்றொரு திட்டமான தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் மதிப்பு கூட்டு இயந்திரங்கள் வாங்குவதற்கு புதிய வேளாண் தொழில்முனைவோருக்கு 40 சதவீகிதமாக ரூ.2 இலட்சம் வரையும், செயல்பாட்டிலுள்ள வேளாண் தொழில் நிறுவனத்தை விரிவுப்படுத்திட 50 சதவீகிதமாக ரூ.5 இலட்சம் வரையும் மானியம் வழங்கப்படுகின்றது. எனவே இத்தகைய திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News