ஆரஞ்சு ரசம்.
தேவையான பொருட்கள் - 1/2 கப் - ஆரஞ்சு சாறு,4 நடுத்தரமான தக்காளி, நெல்லி அளவு – புளி,1 சிட்டிகை – பெருங்காயம்,
சிறிதளவு-கருவேப்பிலை, மல்லி,தேவையானஅளவு –எண்ணெய், தேவையான அளவு – உப்பு ,1/4 டீஸ்பூன் கடுகு , 2 -வற்றல்
வறுத்து பொடிக்க - 1டீஸ்பூன்மிளகு ,1டீஸ்பூன்சீரகம்,5 பல் பூண்டு -1/2 டீஸ்பூன்கடலைபருப்பு , 1/4 டீஸ்பூன்மல்லி, 1/2 டீஸ்பூன்வெந்தயம் -
செய்முறை - தக்காளியை வேகவைத்து தோல்உரித்து அரைத்து கொள்ளவும்.வறுத்து பொடிக்க தேவையான பொருட்களை நன்கு மனம் வரும் வரை வறுத்து ஆறவைத்து பொடித்து கொள்ளவும்.புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி3/4 லிட்டர் தண்ணீரில் கலந்து வைக்கவும்.வாணலியில்எண்ணெய்ஊற்றிபெருங்காயம்,கடுகு,கருவேப்பிலை, வற்றல் சேர்த்து தாளிக்கவும்.பின்னர் வறுத்து தூளாக்கிய பொடியை சேர்த்து வதக்கவும்.பின்னர் தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.மஞ்சள்தூள், புளிகலந்த தண்ணீர்,ஆரஞ்சு சாறு சேர்க்கவும்.நுரை சேர்ந்து வரும் பொழுது இறக்கவும்.ரசம் ஊற்றும் பாத்திரத்தில் வெல்லதூள்,உப்பு, மல்லிதழை சேர்த்து ரசத்தை அதில் ஊற்றவும்.
0
Leave a Reply